தமிழர்களே தமிழர்களே! (3)
அறிமுகப் பதிவு , மற்றும் முன்னைய பதிவு . இன்னும் இந்த நிலை என்றால் என்ன பெருமை? ஈமம் மனிதனின் இறப்புக்குப்பின் தாழிகளில் அந்த உடலை இட்டு அடக்கம் செய்வதே தமிழர் பண்பாடு. அதுதான் சூழலுக்கு நல்லது. பொம்பரிப்பு உள்ளிட்ட இலங்கையின் பல பிரதேசங்களில் ஈமத் தாழிகள் கிடைத்துள்ளன. எரிப்பது என்பது பார்ப்பன சார்பான ஆரிய அடிப்படை இந்துமதக் கொள்கை. சூழலுக்கும் பாதிப்பானது. மண்ணிலிருந்தே நாம் அனைத்தையும் எடுத்துக்கொள்ளுகிறோம். எனவே எமது வாழ்க்கை முடிந்ததும் மண்ணுக்கே நம்மை வழங்குகிறோம் என்கிற உன்னதமான, இயற்கைக்கு உரமாகிற கொள்கை அது. அதை விட்டு, காற்றுக்கு SO 2 CO 2 உள்ளிட்ட எத்தனையோ ஆபத்துக்களை விட்டுச்செல்லும் எரித்தலை செய்கிறோம் நாம். தாலி தமிழர் அடையாளமாக, குடும்ப வாழ்வின் குறியீடாக தாலி ஒரு தமிழர் உன்னதம் என நாம் அனைவரும் இறுமாந்திருக்கிறோம். ஆனால் பத்தாம் நூற்றாண்டுவரை தாலி கட்டும் வழக்கம் தமிழரிடையே நிலவியதற்கு எவ்வித சான்றும் கிடைக்கவில்லை. சிலப்பதிகாரத்திலேகூட தாலி கட்டப்படுவதாக எங்கிலுமே கூறப்படவில்லை. அகழ்வாராய்ச்சிகளில் தாலி சம்பந்தப்பட்ட எதுவுமே கண்டுபி