இடுகைகள்

ஜனவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விஸ்வரூபம் - சூரியன் பார்த்து குரைக்கும் நாய்கள்...

படம்
எந்த நேரத்தில் படத்துக்கு விஸ்வரூபம் என்று கமல் பெயர் வைத்தாரோ தெரியவில்லை, படம் தொடர்பான பிரச்சனைகள் இத்தனை விஸ்வரூபம் எடுத்து அவரையும், அவர் அல்லது அவர் சார்ந்தது சார்பானவர்களையும் குடைந்து வருகிறது. முதலில் அது தொடர்பான பிரச்சனைகள் எழுந்து, தான் தனது சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்து முதலிட்டு எடுத்த படம் கையை சுட்டுவிட்டால் என்ன பண்ணுவது என்று பயந்ததால் டி டி ஹெச் முறையில் தொலைக்கட்சிகளில் படத்தை ரிலீஸ் திகதிக்கு முன் இரவில் ஒளிபரப்ப திட்டமிட்டு, அதனால் வந்த பிரச்சனைகளை தாண்டி வந்தபிறகும், இந்த முஸ்லிம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தங்களை புண்படுத்துவதாக கமல் ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் ஏதாவது ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்குவது சாதாரணமாகி விட்டது. என்னய்யா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? கலை, கலைஞன் என்பதெல்லாம் காட்டாறு மாதிரி. அப்படித்தான் இருக்கும். எங்களால் தாங்க முடியாவிட்டால் ஒதுங்கிப் போய்விட வேண்டியதுதான். என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது? உங்கள் விருப்பத்துக்குத்தான் படம் எடுக்க வேண்டுமா ஒரு மகா கலைஞன்? பணத்துக்காக பெண்களது அங்கங்களை கா

தமிழன் பெருமை - பல்புகள் :)

படம்
தமிழர் பெருமை, தமிழ் தமிழ் என்று சாவது பற்றி ஏற்கெனவே மூன்று பதிவுகளாக கதறு கதறு என்று கதறிவிட்டேன். அவை: வாருங்கள், தமிழர்களாக இருப்பதற்கு வெட்கப்படுவோம்! SHARE IF YOU ARE PROUD TO BE A TAMILAN! தமிழர்களே, தமிழர்களே!! ஆகவே இந்த முறை காமெடியாக டீல் பண்ணுவோம் என முடிவெடுத்துள்ளேன், எதார்த்தமாக பேஸ்புக்கை உருட்டியபோது தற்செயலாக கண்ணில் பட்ட தமிழ் பெருமை பதிவிலேயே தமிழ் பிழையாக இருந்தது. அந்தப் பக்கத்தை பார்வையிட்டதில் ஏகப்பட்ட பிழைகள். சற்று குஷியாகி வேறுசில தமிழர் பெருமை பக்கங்களை பார்த்தால்... எத்தனை தமிழ் பிழைகள்!!! உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம், நீயும்தானே தமிழ் எழுதும்போது பிழை விடுவாய் என்று.. நான் விடலாம். ஏனெனில், நான் தமிழை உயிர் என்று எப்போதுமே கட்டி அழுததில்லை. தமிழ் உயிர் என்று கதறுபவர்கள் எப்படி ஐயா பிழை விடலாம்? கூடாதல்லவா? அதுவும் அவர்கள் விட்டது எழுத்துப் பிழைகள் மட்டுமல்ல, பாருங்களேன், நீங்களே அந்தக் கேலிக் கூத்துக்களை!

தயவுசெய்து இந்தப் பதிவை ஷெயார் செய்யவும் - 2

படம்
( இந்த அங்கலாய்ப்பின் முதல் பகுதியில் அலம்பியதை இங்கே காணலாம். ) மனிதாபிமானம். யாரோ ஒரு குழந்தைக்கு முகத்தில் ஒப்பிரேசன் செய்ய வேண்டுமாம் , அதுக்காக போட்டோவை ஷெயார் செய்! , ஆபிரிக்காவில் குழந்தைகள் பட்டினியால் வாடுகிறார்கள் , எனவே நீ இங்கே சோறு சாப்பிடாதே! இப்படியாக மனிதாபிமான மாமணிகளின் ஷேயார்கள் உங்களையும் கடுப்பாக்கி இருக்கக் கூடும். மனிதாபிமானத்தை வெளிப்படுத்த ஒரே வழி , செயற்படுவதுதான். சொல்லிக் கொண்டிருப்பது இல்லை. இவற்றை ஷெயார் பண்ணினால் சட் பண்ணும் பெண்கள் வேண்டுமானால் அவர்களை மகாத்மாவாக பார்க்கலாம் , ஆனால் மில்லியன் ஷேயார்கள் வந்தாலும் அங்கெ ஒரு குழந்தைக்குக் கூட காய்ந்த ரோட்டி கிடைக்கப் போவதில்லை. இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா ? பசிப்பிணியை போக்குவதற்கு ஒரு தளம் நடத்துகிறார்கள். அந்தத் தளத்தின் விளம்பர வருமானமானது பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க பயன்படுகிறது. அப்படி ஒரு தளத்தை பேஸ்புக்கில் ஷெயார் பண்ணிப் பார்த்தேன். அதற்கு ஷெயார் ஏன் , லைக் கூட கிடைக்கவில்லை. உண்மையாக அக்கறை உள்ளவன் ஷெயார் பண்ணி அல்லவா இருக்க வேண்டும் ? இப்படி இருக்கிறது நிலைமை. இதுத

தயவுசெய்து இந்தப் பதிவை ஷெயார் செய்யவும். (1)

படம்
சே குவேரா... புரட்சிக்காரர்களின் இதயத்திலும், கோமாளிகளின் பேஸ்புக் புரபைல் பிக்சரிலும்   வாழ்கிறார்... *             *             * அபாய அறிவிப்பு..: இந்தப் பதிவை வாசித்ததும், எதோ என்னை நான் ஒரு அறிஞனாகவோ, அதிபுத்திசாலியாகவோ எண்ணிக்கொண்டிருப்பதாகவும், வாசிப்பவன் எல்லோருமே முட்டாள் என கருதுவதாகவும், எனக்கு தமிழையோ, உலகத்தையோ, மனிதர்களையோ பற்றி நல்ல அபிப்பிராயமே இல்லை போலவும் தோன்றும். நான் இந்தப் பதிவில் காய்ச்சி இருப்பது, சற்றும் சிந்தனை இல்லாது, வெறுமனே பேஸ்புக்கில் அறிஞர்களாகவும், நல்லவர்களாகவும் காட்டிக் கொள்பவர்களை மட்டும்தான். ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் இங்கே முட்டாள் எனச் சொல்லி இருக்கும் யாருமே, இப்படியாக ஒரு வலைப்பூ பதிவை வைத்து வாசிக்கும் அளவுக்கு வீச்சு அற்றவர்கள்.. அதே வேளை இப்படியாக ஒரு பதிவை வாசிக்குமளவுக்கு உள்ள நீங்களோ, போலி அறிஞராக பேஸ்புக்கில் நடிப்பவர் இல்லை, அப்படி இருக்க முடியாது. *             *             * இந்த உலகத்தின் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்த நல்லவனும், மொழிப் பற்றாளனும், பெண்ணியவாதியும், புரட்சிக்காரனும் வெளிய

தமிழர்களின் பெருமை... ஓவியமாக

படம்
தமிழர்களிடையே ஓவியக்கலைக்கு போதிய மதிப்பு இருப்பதில்லை. இது உலகத்தின் பெரும்பாலான நவீனர்களின் வழக்கம் என்று பொதுவாக இந்தக் குறைபாட்டை புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், ஓவியக்கலையில் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக் காலத்திலேயே உலகத்தின் முக்கியமான கலைப்பீடமாக தமிழகம் இருந்துள்ளது. தஞ்சாவூர் ஓவியங்கள் உலகத்தின் முக்கியமான பாரம்பரிய சொத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அது உள்ளிட்ட ஓவியக்கலையை தமிழர்கள் புறந்தள்ளி விட்டோம். தமிழிலே ஓவியர்களுக்கு மதிப்பு பெரிதாக இல்லை. அதிலும், இலங்கையில் ஏறத்தாழ துண்டாக இல்லை. (இலங்கையில் ஓவியக்கலையின் நாட்டம் குறைந்ததற்கு, ஓவியம் என்றாலே புத்தரின் சிலைகள்தான் என்பதாக உள்ள கடினமான சிங்கள ஆதிக்க பாடசாலை சிலபசும், பிள்ளை படம் கீறுவதை ரசிக்காத பெற்றோரும் காரணமாக இருக்கலாம்.) தமிழர் தம் அருங்கலைகளுள் ஒன்றான ஓவியக்கலையை மறக்க, உள்ள பல ஓவியர்களும், காலத்தின் புரிதல் இல்லாமல் அழிகிறார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே. இது புரியாத எந்தக்  கலையும், இனமும், மனிதரும் உலகில் நிலைக்க முடியாது. தமிழர் ஒவியத்தின் நிலையம் அ