வெறி
“ரோபி ஆஸ்பத்திரியிலையாம். ” எதிர்பார்த்ததுதான் என்றாலும், சஹா தொலைபேசியில் சொன்னபோது சற்று அதிர்ச்சியாகத்தானிருந்தது. “எப்படி? ” ..என்பதை ஊகித்திருந்தாலும், கேட்டேன். “இடது கையில பிளேட்டால வெட்டி இருக்கிறாள். ரூமுக்குள்ள இருந்து முனகல் சத்தம் வர, மாமிதான் முதல்ல பார்த்திருகிறா.. இரவே கொண்டுவந்தாச்சு.. தேப்பன் தாயும் வந்திருக்கினம். நல்ல காலம் பெரிசா ஒண்டும் நடக்கேல்ல.. ” ‘கெட்ட காலம்.. ’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். நான் ரிசீவரை எடுத்து காதில் வைத்ததுமே துள்ளி மேசைமேல் ஏறி, தலையை நுழைத்து காதை ரிசீவரின் அந்தப் பக்கம் வைத்து ஒட்டுக்கேட்கும் பழக்கமுள்ள என் சம்யு நான் ரிசீவரை வைத்ததுமே கேட்டாள்.. “ஆரப்பா கைய வெட்டினவா? நோகாதோ? ” குழந்தைகள் வாழ்க்கை எளிமையானது.. கேள்விகள் கேட்பது - எல்லாவற்றையும். பெரியவர்கள் வாழ்க்கை சிக்கலானது. பதில் சொல்வது - எல்லோருக்கும். * * * இரண்டு வருடங்களுக்கு முன்னர், உயர்தரப் பரீட்சைக்கு மூன்று மாதங்கள் இருக்கும்போது, பௌதிகவியல் மீட்டலுக்காக – பரீட்சை வினாத்தாள்கள் செய்துவிடச் சொல்லி என்னிடம் வந்தவர்கள் சஹானாவும், ரோபியு