நீயா? நானா? கோபிநாத்துக்கு அக்கறை இருக்கிறதா?
நாமக்கல்லில் இருந்து மாணவர் அரவிந்தன் அனுப்பியது -------------------------------------------------------------------------- விஜய் டிவி கோபிநாத் நீயா? நானா? வில் தமிழக மாணவர்களுக்கு சமூக விசயங்களில் எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது? என்று சென்ற மாதத்தில் (Feb 10, 2013) ஒரு நிகழ்ச்சி நடத்தினார். எங்கிருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை... மாணவர்களுக்கு தமிழக சமூக விசயங்களின் ஜீரோ அளவுக்கு அறிவு இருப்பதாக ஒரு தோற்றத்தை உண்டு பண்ணினர். அதை பார்த்த பலரும் இது போன்ற மாணவர்களை வைத்து கொண்டு தமிழ் சமுதாயம் என்ன செய்ய போகிறது. மாணவர்கள் சினிமா பார்க்கவும், பெண்கள் பின் சுற்றவும்தான் லாயக்கு. அந்தோ பரிதாபம்!! என்ற அளவுக்கு பேஸ்புக்கிலும், சமூக தளங்களிலும் விமர்சனங்களை எழுதித் தள்ளினர். என்னை போன்ற மாணவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பெருத்த அவமானமாகவே பட்டது. ஒரு தொலைகாட்சி ஐம்பது பேரை மாணவர்கள் பிரதிநிதியாக பிரதிபலித்து மாணவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் போன்ற தோற்றத்தை எவ்வளவு மலிவாக தோற்றுவித்தது. இதோ இன்று மாணவர்கள் ஈழத்திற்காக போராட்டத்தை கையில் எடுத்து உள்ளனர். அரசியல்