இடுகைகள்

இடங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூடத்தார் கோயிலும் குமுறலில் தப்பித்த கதையும்

படம்
ஏமாற்றமான எதிர்பார்ப்புக்களும்  சிதைந்து போகும் சின்னங்களும் - 03 எங்கள் ஊர்சுற்றலில் நடந்த அனுபவங்களுடன் வரலாறுகள் பற்றியும் பார்த்துக்கொண்டிருக்கிறோம் இல்லையா...??? இவ்வாறு யாழ்ப்பாணத்தின் ஊர்களையே மேய்ந்து கொண்டிருந்த நமக்கு இளவாலை எனும் ஊருக்கும் போக வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே கூடத்தார் கோயில் எனும் இந்நினைவுச்சின்னம் குறித்த கட்டுரையொன்று எங்களூர்ப் பத்திரிகைகளில் வெளியாகி இருந்ததால் அதையும்  படித்து விட்டு மிக்க ஆவலுடன் அங்கே பயணித்தோம். முன்னைய பதிவுகளில் கூறியது போல் கோப்பாய் கோட்டை ,வெடியரசன் கோட்டை என கோட்டையையே சுற்றி திரிந்து நொந்து நூலாய்ப்போன எங்களுக்கு இளவாலையில் வசந்தபுரத்திலிருந்த கூடத்தார் கோயில் எனும் சரித்திர நினைவுச் சின்னம் ஒரு முற்றிலும் புதிய அனுபவத்தை கொடுத்தது. அது எந்தளவிற்கு இருந்ததென்றால் “தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்” எனும் பழமொழியின் ஆழத்தை ஆத்மசுகத்துடன் அனுபவித்து மூச்சு கூட விட முடியாதபடி மூச்சை விட்டு தப்பி ஓடி வரும்படி செய்துவிட்டு  இருந்தது.  கூடத்தார் கோயிலும் வரலாறும்                        இலங்கையின் தொல்குடி திராவிடர

எரிந்த யாழ் நூலகமும் சிதைந்த பண்பாடும் - இனபேதத்தின் உச்சம்

படம்
புதிய நூலகத்திற்கான இடத்தெரிவும் கட்டிட அமைப்பும்  [இதன் முன்னைய பதிவிற்கு இங்கே]   யாழ்பாண மத்திய நூல்நிலைய சபை என நூலகத்தின் உருவாக்கத்திற்காக தொடங்கப்பட்ட இச்சபையின் தலைவராக நகரபிதா சாம் சபாபதி அவர்களும் உபதலைவராக லோங் சுவாமிகளும் இருந்து கடுமையாக உழைக்கலாயினர். பல இடங்கள் நூலகத்தின் அமைவிற்காக பலதரப்பட்ட சிக்கல்களின் மத்தியில் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக அரசினர் நகரநிர்மான நிபுணர் திரு.வீரசிங்கா அவர்களின் தெரிவிற்கமைய தற்போது நூலகமுள்ள பழைய முற்றவெளி எனும் இடம் தெரியப்பட்டது. நல்ல நேரத்தில் லோங் சுவாமிகளின் ஆசியுடன் சைவாசாரமுறைப்படி அத்திவாரம் வெட்டி 29/03/1954 அன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அன்றைய நகர மேயர் சாம் சபாபதி, வணக்கத்திற்கு உரிய தந்தை லோங் சுவாமிகள், பிரித்தானியத்தானிகர் சேர்.செரில்சையஸ், அமெரிக்க தூதுவர் எச்.ஈ.பிலிப்கிகுறோவ், இந்தியத்தூதுவரின் முதற் செயலாளர் ஸ்ரீ சித்தார்த்த சாரதி, போன்றோர் திரை நீக்கம் செய்து வைத்தார்கள்.                                                             அன்றைய நாளில் நூலகத்தின் வளர்ச்சிக்காக அமெரிக்க உதவியாக 22000 டொலர்கள

யாழ்பாண நூல்நிலையம் – ஆரம்ப வரலாறு

படம்
ஓர் சமூகத்தின் சிறப்புமிக்க அடையாளமாக காணப்படுவது அச்சமூகத்தின் அறிவுத்தேடலும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும்தான். அந்தவகையறாக்களில் யாழ்பாண நூல்நிலையம் என்பது வெறுமனே யாழ்பாண தமிழர்களின் அடையாளமாக மட்டும் நோக்கப்படாது ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களின் சாதனைச்சின்னமாக நோக்கப்படுகிறது. அதன் காரணமாகத்தான் அது தன் வர்ணப்பூச்சு சுவர்களுக்குள்ளே பல யாழ்ப்பானத்தவரின் உழைப்பை மட்டும் சுமக்காது பல எரிகாயங்களையும் சுமந்து நிற்க்கிறது. ஓரிடத்தில் ஒரு அறிவுசார்ந்த கட்டிடம் எழுகிறதென்றாலே அதன் பின்னால் அவ்விட மக்களின் கடின உழைப்பும் கடும் முயற்சியும் இருக்கிறது என்று தானே பொருள். அந்தவகையில் யாழ்பாண நூலக வரலாற்றை அரசியல் சார்ந்த காரணங்கள் அன்றி வரலாற்று நோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு அறியத்தருவதே இத்தொடரின் நோக்கம். தோற்றுவாயும் தொடக்கமும் இன்று பெரியஅளவில் பல புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் தன்னுள்ளே கொண்டு இருக்கும் இந்த நூலகம் 1933 ஆம் ஆண்டு ஒரு சிறு கொட்டிலில் வாசிகசாலையாக இருந்து படிப்படியாக அறிஞர்களின் கடும் முயற்சியாலேயே இன்றைய நிலையை அடைந்துள்ளது.                            

வெடியரசன் கோட்டையா.....???? வெடிமிகு பேட்டையா.......????

படம்
ஏமாற்றமான எதிர்பார்ப்புக்களும் சிதைந்து போகும் சின்னங்களும் - 02  போன பதிப்பில் கோப்பாய் கோட்டை பற்றியும் அங்கு சென்று நாமடைந்த புளகாங்கிதத்தையும் தெரிவித்திருந்தேன். அப்பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும். இவ்வாறு வெங்காயம் நண்பர்களுடன் நாம் சில பல ஊர்களுக்கு சென்று அடிவாங்காத குறையாய் நின்ற நிலையில் அடுத்ததாக நாம் செல்ல திட்டமிட்டிருந்த இடம்தான் ஊர்காவற்றுறையும் அதன் சிறப்பு மிக்க இடங்களும். ஒரு வழியாக ஊர்காவற்றுறைக்கு போய் சேர்ந்தோமா...........பிற ஊர்களில் நாம் பெற்ற அனுபவங்களையும் வலிகளையும் கொஞ்சமும் குறையவிடாது உயர்த்திவிட்டது அந்த ஊர். விஷ்ணு புத்திர வம்சமும் வெடியரசன் கோட்டையும்  இலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களை எல்லாம் பல தமிழ் மன்னர்களும் வன்னிமைகளும் ஆண்ட அதேநேரம் அவற்றுக்கெல்லாம் தலைமை அரசாக விளங்கியது யாழ்ப்பாண இராசதானிதான். உண்மையில் யாழ்பாண அரசை பேரரரசாக கொண்டு பிற தமிழர் வாழ் பகுதிகளில் சிற்றரசுகளே நடந்து கொண்டிருந்தன. இது குறித்து நாம் யாழ்பாண இராஜ்ஜியம் எனும் தொடரில் வரும் பகுதிகளில் விரிவாக பார்க்கலாம்.                                          

மீசாலை சோலையம்மன் கோயில்

படம்
மீசாலை சோலையம்மன் கோயில் வெங்காயம் நண்பர் குழுவுடன் நாங்கள் மேற்கொண்டிருந்த யாழ்பாணச்சுற்றுப் பயணத்தின் போதுதான் தற்செயலாக சாவகச்சேரியிலுள்ள மீசாலை சோலையம்மன் கோயிலுக்கு செல்ல நேர்ந்தது. சாதாரண கோயில்களைப்போலவே அக்கோவிலையும் எதிர்பார்த்துச்சென்ற எங்களுக்கு ஒரே பிரமிப்பாகவும் வியப்பாகவும் போய்விட்டது. யாழ்ப்பாணத்தில் இவ்வளவு அழகான இடமா...?? என எல்லோரும் ஒரு கணம் பிரமித்து விட்டோம். அத்தகைய இயற்கை சூழ் சூழலில் அமைந்திருந்தது அக்கோயில். பெயருக்கேற்றால் போலவே அக்கோயிலை கருநாவல், கொன்றை ,கொக்கட்டி ,கிஞ்சா ,கூகைமா, மகிழமரம் போன்ற மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்திருந்தது. அங்கு சென்றவுடனேயே அங்கிருந்த இயற்கை சூழல் எங்களுக்கு ஒருவித மனஅமைதியை அளித்ததை எங்களால் உணர முடிந்தது. கோயிலின் சூழலில் அமைந்திருந்த ஆல மரமும் அதுசார் பகுதியும் இக்கோயிலுக்கு மேலும் அழகை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இம்மட்டுக்கும் கோயிலின் அமைப்பும் அளவும் பாரியதாக இல்லையாயினும் இங்கிருக்கும் இயற்கையே கோயிலுக்கு பிரமிக்க தக்க வடிவையும் சிறப்பையும் வழங்கியுள்ளது. வரலாறு  இவ்வாலயத்தின் தோற்றுவாய் பற்றி சரியாக