வெள்ளை மாளிகையின் கறுப்பு அடிமைகள்-02
முதல்பதிவை வாசிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்து வாசித்து விட்டு தொடரவும். போன பதிப்பில் ஆபிரிக்காவிலிருந்து அடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றியும் அவர்களின் மீது அடக்குமுறைகளை திணிப்பதற்க்காகவே உருவாக்கப்பட்ட சட்டங்களின் சாராம்சத்தையும் பார்த்தோம். எதையாவது ஒன்றை பெறுவதற்காக ஏதோ ஒன்றை கொடுப்பது காலம் காலமாக இந்த உலகில் நடந்து வருவதுதான். ஆனால் வெறும் இரண்டு வேளை உணவுக்காகவும், உடை எனும் பெயரில் வழங்கப்படும் ஏதோ ஒன்றிற்காகவும் கருப்பின அடிமைகள் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல. மானம் ,உடம்பு ,உயிர் ,உறவுகள் என வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். இவை கூடப் பரவாயில்லை இழைக்கப்பட்ட கொடுமைகளும் சித்திரவதைகளும் கூறிமாளாது. ஆடு ,மாடு, பன்றி போன்ற விலங்குகள் கூட கறுப்பர்களை விட ஒரு படி உயர்ந்ததாகவே கருதப்பட்டது அன்றைய அமெரிக்க சரித்திரத்தில். கறுப்பர்களை கொடுமைப்படுத்துவது தவறாகக்கூட அன்றைய அமெரிக்கர்களுக்கு தெரியவில்லை மாறாக அதை ஒரு கடமையாக கருதிக்கொண்டதுடன் மதரீதியிலும் அதை நியாயப்படுத்த காரணங்கள் தேடிக்கொண்டனர். வேலைகளும் நடைமுறையும்............