இடுகைகள்

legends லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலிலியோ vs ரோமன் கத்தோலிக்க திருச்சபை...

படம்
கலிலியோ தொடர்பில் 2 பதிவுகள் ஏலவே பார்த்தாயிற்று இது இறுதிப்பதிவு.கலிலியோ என்ற விஞ்ஞானி மரபு ரீதியாக நம்பிவந்த விடயங்களை எதிர்த்தான் ஆனால் அந்த மரபுரீதியான விடயங்கள் கிறீஸ்தவ சமயத்திற்குள்ளும் ஆழ ஊடுருவி இருந்ததால் கலிலியோ மீது மதத்தாக்குதல் நடத்தப்பட்டது.ஆயுள்தண்டனை வீட்டுச்சிறை எனப்பலவற்றை கலிலியோ அனுபவிக்க நேர்ந்தது கலிலியோவின் புத்தகங்களை விற்றல் வாங்குதல் மரணதண்டனைக்குரிய குற்றமாகக்கருதப்பட்டது.இறுதி நாளில் தொற்று நோயால் பாதிக்கபப்ட்டபோது கூட வைத்தியர் அனுமதிக்கப்படவில்லை மதம் கலிலியோவை முற்றாக அழிப்பதற்கு தன்னால் ஆனமுழுமுயற்சியையும் மேற்கொண்டு தோற்றது ஆனால் கலிலியோவும் மனமுடைந்துதான் போனார் ஒரு மனிதன் எத்தனை எதிர்ப்புக்களைத்தான் தாங்கமுடியும்? ஒருவேளை கலிலியோ கத்தோலிக்க திருச்சபைக்கு பயந்து தான் உண்டு தன் வேலையுண்டு என்று குடும்பத்தை கவனிக்கசென்றிருந்தால் நாம்  சில நூறுவருடங்கள் பின்னே இருன்திருப்போம் நல்லவேளையாக மதம் ஜெயிக்கவில்லை... கலிலியோ vs மதவாதிகள் மரபு ரீதியாக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரே சக்திதான் ஒரு பொருள் மீது தாக்கும் என்பதை கலிலியோ உடைத்தெறிந்தார்.அதற்கு

ஓளவையார் ஒருவர்தானா?-02

படம்
இலக்கியங்களில் ஓளவை என்னும் சொல் அன்னை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. தமிழ்க்கலைக்களஞ்சியத்தில் "அம்மை என்பதன் திரிபாகிய அவ்வை என்ற சொல்லுடன் சிறப்புணர்த்தும் விகுதியாகிய ஆர் சேர்ந்து ஓளவையார் என்னும் சொல் பெண்களில் உயர்ந்தவரைக்குறிக்கின்றது." என குறிப்பிடப்பட்டுள்ளது. "அவ்வை மகளிவள்தான் அம்மணம் பட்டிலா வையேயிற்று ஐயைக்கண்டாயோ தோழி" இது சிலப்பதிகாரத்தில் கூறபப்ட்டது.இதில் தாய் என்னும் பொருளில் அவ்வை என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மணிமேகலைக்காப்பியத்தில் "தவ்வைய ராகிய தாரையும் வீரையும அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன வாய்வ தாக மானிட யாக்கையில் தீவினை அறுக்கும் " இதில் தமக்கை என்னும் பொருளில் தவ்வை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒளவையின் வரலாறுபற்றி துணைக்கதைகளுடன் பல கதைகள் உள்ளன.திருவள்ளுவர் கதையில் ஓளவையார் பற்றிய வரலாற்றைப்பார்ப்போம். பாண்டி நாட்டில் தமிழ்ச்சங்கப்புலவர்கள் தம் புலமைச்செருக்கால் கர்வமுற்றிருந்தார்கள்.சிவன் அவர்களின் அகந்தையை அடக்க நான் முகனை திருவள்ளுவராகவும்,திரு

கலிலியோ vs மதவாதிகள்-02

படம்
ஒரு பொருளின் திணிவை அதன் கனவளவால் வகுத்தால் பொருளின் அடர்த்தி பெறப்பட்டுவிடும்.இதைப்பயன்படுத்தி கிரீடத்தின் அடர்த்தியைக்கண்டு அதை தங்கத்தின் அடர்த்தியுடன் ஒப்பிட்டால் தூய தங்கத்தால் கிரீடம் செய்யப்பட்டுள்ளதா அல்லது ஏதாவது மாசுக்கள் கலக்கப்பட்டுள்ளதா என்று கண்டுபிடித்துவிடமுடியும்.ஆனால் கிரீடத்தின் கனவளவை அளப்பதற்கு எந்தஉபகரணமும் இருக்கவில்லை.அவ்வாறு அளக்கவேண்டுமாயின் கிரீடத்தை அடித்து நொருக்கி ஒரு கோளப்பாத்திரத்தினுள் நிரப்பவேண்டும் அதற்கு மன்னர் சம்மதிக்கமாட்டார்.இன் நிலையில்தான் ஆக்கிடமிஸ் குளிப்பதற்காக தொட்டியினுள் இறங்கியபோது தொட்டியில் இருந்து  நீர் வெளியேறியது.உடனே ஆக்கிடமிஸ்ஸிற்குப்பொறிதட்டியது.வெளியேறிய நீரின் கனவளவும் அமிழ்த்தப்பட்ட பொருளின் கனவளவும் ஒன்று என அறிந்துகொண்டார் இதன் மூலம் கிரீடத்தின் கனவளவைக்கண்டு அடர்த்தியைக்காணமுடியும்.தங்கத்தின் அடர்த்தி ஏற்கனவே தெரியுமாகையால் கிரீடம் தூய தங்கத்தால் ஆனதா இல்லையா என்பதை இலகுவில் கண்டுபிடித்துவிடமுடியும்.இந்த விடயம் அரிஸ்டோட்டலுக்கு பளிச்சிட்டவுடன் நிர்வாணமாகவே குளியலறையில் இருந்து அரசசபைக்கு ஓடினார் யூரேக்கா யூரேக்கா என்று க

மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா?

படம்
இன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உள்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. தான் உச்சத்தில் இருந்த முப்பது வருட காலத்தின் அத்தனை இளம் எழுத்தாளர்களையும், வாசகர்களையும் வியந்து பார்க்கவைத்த எழுத்தாளர் சுஜாதா. அவர் இறந்து இத்தனை நாட்களின் பின்னரும் அவருக்கான வீச்சு குறையாதிருப்பது தமிழ் எழுத்துலகில் அதிசயமே. ஏனெனில், பல எழுத்தாளர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை மறந்துவிடுவதுதான் தமிழர்களின் ஸ்டைல். உதாரணமாக, ஜெயகாந்தன் என்கிற தமிழ் இலக்கிய உலகின்... இலக்கிய உலகின் உச்சங்களில் ஒருவர் இருக்கிறாரா, இல்லையா என்பது பலருக்கு தெரியாது, அவர்களுக்கு தேவைப்படவும் இல்லை. ஆனால் சுஜாதா? இறந்த பிறகும் இரண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார். மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கை வாசிக்கலாம் என்று வந்தால் இது என்னப்பா ஆவணப்படம் மாதிரி போகிறது என்று முணுமுணுப்பது கேட்கிறது. சுஜாதா என்கிற பௌதீக மனிதரைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும், அல்லது எங்கே தெரிந்துகொள்ளலாம் என்பதாவது தெரிந்திருக்கும். இந்தப் பதிவு அவர் சம்பந்தப்பட்ட இருவேறு பார்வைகள