ஓளவையார் ஒருவர்தானா?-03
உறையூரிற் குலோத்துங்கசோழன் ஆட்சிசெய்துகொண்டிருந்தபோது அவனது அவைக்களப்புலவராக ஒட்டக்கூத்தர் என்பவர் அமர்ந்திருந்தார்.அவர் மிகுந்த கல்விச்செருக்குடையவர் யாரையும் மதிக்கமாட்டார் ஓளவையையும் அவர் மதிக்கவில்லை.அவரது செருக்கை அடக்க சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்திருந்தார் ஓளவையார்.ஒருசமயம் மன்னனது அவைக்குச்சென்றிருந்தபோது அங்கிருந்த புகழேந்திப்புலவருக்கு மதிப்புக்கொடுத்துவிட்டு ஒட்டக்கூத்தரை மதியாது அமர்ந்துவிட்டார். உடனே கூத்தர் "கிழவி நீ என்னை அவமதிக்கக்காரணம் என்ன? என்றார்.உடனே நும்மை விட அறிவிற் சிறந்தவராதலின் அவ்வாறு செய்தேன்" என்றார் உடனே கூத்தர் எம்மிருவரது அறிவின் ஏற்றதாழ்ச்சிகளை உன்னால் அளவிடமுடியுமா?என்று கேட்க.ஓளவை இப்போதே அளவிட்டுக்காட்டுகின்றேன் நற்றாய் இரங்கற்றுரையில் சோழனை முன்னிலைப்படுத்தி ஈற்றடியில் திங்களின் பெயரை மூன்று முறை அமைத்து நீ ஒரு செய்யுள் பாடுபார்க்கலாம் என்றார் ஓளவை. உடனே கூத்தர் செய்யுளை விரைவாக எழுதிப்பாட ஆரம்பித்தார் அதில் தன்னைக்குழந்தையாகவும் ஓளவையை பேதையெனவும் வருமாறு... வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக் கமுகின் மீதேறித் துள்ளி முகிலைக் கிழி