இடுகைகள்

ஆகஸ்ட், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Upcoming Super Games - 2012 and 2013

படம்
இரவு பகல் பார்க்காமல் வீட்டில் உள்ளவர்கள் கதறகதற வெறித்தனமாக கொம்பியூட்டர் கேம்ஸ் விளையாடுபவரா நீங்கள்? ஐ.ஜி.ஐ யில் பி.எஹ்.டி முடித்தவரா நீங்கள் அப்படியானால் உங்களுக்கான பதிவுதான் இது.75 வீதமான அமெரிக்கசிறுவர்கள் கேம்ஸ்களை தீவிரமாக விளையாடுகின்றார்கள். அதில் 42% ஆனவர்கள் பெண்கள். Online Games இல் 15 பில்லியன் டொலர்கள்வரை பணம் ஈட்டப்படுகின்றது. அட அவ்வளவு ஏன் உலகம் முழுவதிலுமுள்ள முகப்புத்தக பாவனையாளர்களில் 53% ஆனவர்கள் முகப்புத்தகத்திலேயே கேம்ஸ்களை விளையாடுகின்றார்களாம்.பெற்றோர்கள் தரப்பில் கேம்ஸ்களுக்கு எப்போதுமே வரவேற்பு  கிடைப்பதில்லை என்பது உண்மைதான். அதுக்காக இதுக்கெல்லாம் அசருர ஆக்களா நாம? 2012,2013 ஆண்டுகளில் கேம்ஸ் உலகின் முன்னனி நிறுவனங்களினால் என்னென்ன கேம்ஸ்கள் வெளிவருகின்றன என்பது தொடர்பான் பதிவுதான் இது.அந்தந்த கேம்ஸ்களுக்கு  Official Trailer உம் போடப்பட்டிருக்கின்றது. 01.  Dead Or Alive 5 Release Date :   25-September-2012 ( 25.09.2012 ) To :  Xbox-360 and PS3 Genre :   Fighting Publisher :   Tecmo Developer :   Team Ninja Image : Official

போட்டோஷொப் நிஜவாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்கும்?

படம்
போட்டோஷொப் நிஜவாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனைதான் இது சிந்தித்தால் நன்றாகத்தான் இருக்கின்றது.வீட்டிற்கு வர்ணமடிப்பதாக இருந்தால்  போட்டோஷொப்பில் இருக்கும் பெயிண்ட்வாளி இருந்தால்போதும்.சிக்னலில் ரெட் லைட் எரிந்தால் பிறஸ்ஸால் அதை பச்சையாக்கிவிடமுடியும் தேவையில்லாத பொருட்களை ஏன் நபர்களையே கட் செய்ய முடியும்.சமந்தாவை வீதியில் கண்டாலே போதும் கட் பண்ணி நம் அருகிலேயே இருக்கவைத்துவிட முடியும்.அட பணம் தேவையில்லைப்பா ஒரு தாள் இருந்தா போதாது?ஹிஸ்ரியில் இதுவரை நடந்தவை இருக்கும் வரலாற்றில் தேவையற்ற சம்பவங்களை நீக்கிவிடமுடியும்.பீச்சில் அரைகுறையுடன் திரியும் பெண்க...சென்ஸர் செய்யப்பட்டுள்ளது.யாருக்குத்தெரியும் எதிர்காலத்தில் ஒரு பையனுக்கு ஒரு பவர் கிடைக்கின்றது.அவனுக்கு உலகம் போட்டோஷொப் சொஃப்ட்வேராக தெரியும் போட்டோஷொப் ஆகவே அவனால் பயன்படுத்தமுடியும் போட்டோஷொப்மான் என்ற பெயரில் வெளிவந்தாலும் வரலாம்.இப்போதைக்கு கற்பனையான சில புகைப்படங்கள். இவன் கெட்ட கிருமிப்பா ஒரே ஒரு நோட் இருந்தாலே போதும் இது நல்லா இருக்கே வரலாறு முக்கியம்

கவுண்டமணியால் கலாய்க்கப்படும் பிரபல நடிகர்கள்

படம்
கவுண்டமணி சினிமாவைவிட்டு அண்மைக்காலமாக ஒதுங்கிவிட்டாலும் சந்தானத்தின் மூலமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.சந்தானம் அதனால் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.சரி விடுங்கள்  யு டியூப்பில் பிரபல நடிகர்களின்  பஞ் வசனங்கள்.அவர்களது அக்ஸன் காட்சிகளுக்கு கவுண்டமணி தன் பாணியில் காலாய்க்கின்றார். கவுண்டமணி பற்றிய பதிவு . முக்கியமாக விஜய்,விக்கிரம் அஜித் தனுஸ் போன்றவர்களும் காலாய்க்கப்படுகின்றார்கள்.இவற்றை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள்.அட அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. அழும் ஜெமினிகணேசன்....இறுதியில் டி ஆர் அழுவார் பாருங்க..ஊகும் நீங்களே பாருங்க அடுத்து கவுண்டமணி காலாய்த்தது அஜித்தை... என்ன உன்னை எல்லாரும் தல தல என்கிறாங்க? என்று கவுண்டமணி இதில் ஆரம்பிக்கின்றார் விஜயை பற்றி சொன்னா விஜய்ஃபான்ஸ் கடுப்பாகிடுறாங்க.தலயைப்பற்றி சொன்னா தல ரசிகர்கள் கடுப்பாயிடுறாங்க...சோ 2 பேரையும் கலாய்த்ததைப்பற்றி போட்டிருக்கன்.சிலர் நடிகர்களை பெயர் சொல்லிக்கூட அழைக்கமாட்டார்களாம் அண்ணன் அப்படியென்று அழைப்பார்களாம்.என்ன கொடுமையோ இதுவரை அப்படியானவர்களை நான் சந்திக்கவில்லை என்னைப்பொறுத்த்வரை அவர்கள் நடிகர

மைக்கல் ஜாக்ஸன்

படம்
மைக்கல் ஜாக்ஸன் பொப் இசையின் கடவுள்,பாடுவார் ஆடுவார் பாடிக்கொண்டே ஆடுவார்.இவரது அல்பங்கள் உலகில் அதிகம் விற்பனையாகி கின்னஸ்ஸில் இடம்பிடித்துள்ளன.6.5 கோடி கொப்பிகள்.இவரது அத்தனை அல்பங்களும் இதுவரை 20 கோடி கொப்பிகள் விற்பனையாகியுள்ளன.சாதாரணமாக ஒருவன் சண்டித்தனம் செய்தால் ப்ரூஸ்லீ என்கிற நினைப்பு என்று பேசுவோம்.யாராவது ஒரு பையன் வீதியில் ஆடிக்கொண்டிருந்தால்"ஆமா பெரிய மைக்கல் ஜாக்ஸன் றோட்டிலனிண்டு ஆடுறாராம்" இதிலிருந்து பிரபலம் தெரிந்திருக்கும்.என்னைப்பொறுத்தவரை  யாரிடமாவது நீங்கள் மைக்கல் ஜாக்ஸனா யாருய்யா அந்தாளு என்று  கேட்பவர்களிடம் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது.பாடல்களுக்கு மெய்மறந்து ஆடுவது சேர்ந்து ஆடுவது ஒரு ரகம்.ஆனால் மைக்கல்ஜாக்ஸனின் மந்திரப்பாடல்கள் ஆடல்களுக்குமுன்னால் ரசிகர்களின் நிலை விளக்கமுடியாதது.உணர்ச்சிவசப்பட்டு ஆடுவார்கள் பாடுவார்கள்,கண்ணீர்விடுவார்கள்,கதறுவார்கள் மயங்கிவிழுவார்கள்,உடைகளைக்கிழித்தெறிவார்கள்.பொலீஸ் ரசிகர்களை அடக்குவதற்கு மிகவும் சிரமப்படும்.பொலீஸ் பாதுக்கப்புக்களையும் மீறி மேடைக்கு பாய்ந்து மைக்கல் ஜாக்ஸனை அணைக்கும் ரசிகர்களையும் அவர்களை ம