ஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......
உங்களில் பலர் " ஜோதா அக்பர்(2008)" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் செய்யப்பட்ட ஒரு திரைப்படம். உண்மையிலேயே அழகான, காதலை மையப்படுத்திய ஒரு திரைப்படம் என்றால் அது மிகையாகாது. மொகலாயப் பேரரசர் அக்பருக்கும் (இஸ்லாமியர்), ஜோதா எனும் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அவரின் ராணிக்கும் (இந்து) இடையிலான காதலை ஊடல் கலந்து ரசிக்கும் படியாகக் காட்டியிருந்தார்கள். "ஜோதா அக்பர்", காதலை விடவும் மேலதிகமாக சமயங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் வலியுறுத்தியிருந்தது - மாமன்னர் அக்பரின் கதாபாத்திரம் மூலமாக. இது அதன் திரைவிமர்சனம் என எண்ணியிருக்கும் அன்பர்கள் என்னை மன்னித்து, தொடர்க. அக்பரின் தொலைநோக்குப் பார்வையும், ஆட்சித் திறமையும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு நல்லதோர் முன்னுதாரணம். ஒரு மன்னன்- அதுவும் பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்றதொரு நாட்டின் மன்னன் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அக்பர் பாதுஷா 100% சரியான உதாரணம். திரைப்படத்தில் ஜோதா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் (ம்ம்... எப்பிடி இருந்த பொண்ணு ..