பிரான்சியப் புரட்சி பகுதி 1
அறிமுகம் 1789 ஆம் ஆண்டிலே உலக முக்கியத்துவம் வாய்ந்த இரு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. அமெரிக்க ஜக்கிய நாட்டின் கூட்டாட்சியமைப்பு நடைமுறைக்கு வந்ததாள் பிரான்சியப் புரட்சி மூண்டது. நெகிழும் தன்மை வாய்ந்த ஆட்சி முறையின் வழி புதிய உலகமானது விரிவடைதலும் ஒன்றுபடுதலும் ஒருங்கு திகழ்ந்த ஓர் ஊழியினை அடைந்தது. இருபத்தைந்து ஆண்டுகளாகப் பெரும் குழப்பம் கொந்தளிப்புமுள்ள நிலைமைக்குப் பழைய உலகம் திரும்பியது. பின்பு அவற்றால் ஏற்கனவே நிலவிவந்த அரசியல் அமைப்புத் தகர்க்கப்பட்டது. 1789 இற்குப் பிந்திய அந்நூற்றாண்டின் இறுதிகளில் ஜரோப்பாவிலே நிகழ்ந்த சம்பவங்களை முறையே புரட்சி, போர், சர்வதிகாரப் பேரரசு என்ற நான்கு சொற்களால் குறிப்பிடலாம். இவ்வரலாற்றினை அடிக்கடி கூ ற ப்படுவதுபோல ஏற்கனவே நிரு ண யிக்கப்பட்ட ஒரு முடிவினை நோக்கிச் செல்லும் வீரகாவியமாக கருதலாம். இக்கருத்துப்படி, வலோற்காரப் புரட்சியானது இயற்கையாகவே போரிற்கு அடிகோலியது. புரட்சியும் போரும் ஒன்று பட்டு அவற்றின் இருதிவிளைவகப் போர்வீரநெருவனின் சர்வதிகார ஆட்சியாக முடிந்ததன படைப்பலத்தோடு கூடிய இயற்கையாகவும் கட்டாயமாகவும் நெப்போலியனின் பேராசை