கலிலியோ vs மதவாதிகள்-01
கலிலியோ கலிலி இத்தாலியை சேர்ந்த தலை சிறந்த விஞ்ஞானி.பௌதிகவியல் முன்னோடிகளுள் முக்கியமானவர். நியூற்றனுக்கு முற்பட்டவர்.பூமி பிரபஞ்சத்தின் மையம் எனவும் பூமியைச்சுற்றித்தான் சூரியன் ஏனைய கோள்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன என நம்பிக்கொண்டிருந்தகாலம் அது.அக்காலத்தில் முக்கிய புள்ளிகள் யாராவது எதையாவது சிந்தித்துக்கூறினால் உடனே ஏற்றுக்கொள்வார்கள்.இக்காலத்தில் போகிற போக்கில் ஒன்றைக்கூறிவிட்டு விஞ்ஞானிகளே இதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று கூறியதும் மக்கள் நம்பவில்லையா?அதே மாதிரித்தான்.மக்களோ வேறுயாரொருவரோ கூறியவற்றை குறைந்தபட்ச பரிசோதனைக்குக்கூட உட்படுத்த மாட்டார்கள்.அதுவும் கூறுபவற்றை மதத்திற்கூடாக எடுத்துக்கூறினால் மறுபேச்சிற்கே இடமில்லை.உடனே அதை ஏற்றுக்கொண்டுவிடுவார்கள்.(இப்போதும்தான்) தங்களது மத நம்பிக்கை காரணமாக கலிலியோவின் விஞ்ஞானக்கருத்துக்களை கொள்கைகளை கண்டுபிடிப்புக்களை சிந்தித்துப்பார்க்கக்கூட மறுப்புத்தெரிவித்துவந்தார்கள் மதவாதிகள். மத நம்பிக்கையாளர்களுக்கும் கலிலியோவிற்கும் இடையில் நடைபெற்ற மோதல்தான் கலிலியோவை உலகறியச்செய்வதில் முக்கிய பங்குவகித்தன.தான் கண்டு பிடிப்பவற்றை