மலாலாவிற்கு(malala) நோபல்பரிசு வழங்கலாமா?
மலாலா என்ற 15 வயதுச்சிறுமிக்கு அமைதிக்கான நோபல்பரிசு வழங்குவதற்கான ஆதரவுக்குரல்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.அறுபதாயிரம் பேரின் ஆதரவோடு, அவளுக்கு நோபல் பரிசு வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.மலாலா யூசப்சையி என்பதுதான் சிறுமியின் முழுப்பெயர்.பாகிஸ்தானின் வடமேற்குப்புறத்தில் உள்ள மிங்காரா என்னும் ஊரின் மாணவிதான் மலாலா.2009 வரை அந்தப்பகுதியில் தலிபான்களின் அட்டூழியம் அதிகரித்திருந்தது.பல பிற்போக்குத்தனமான விடயங்களை மதம் சார்பாக மக்கள் மீது திணித்துக்கொண்டிருந்தார்கள் தலிபான்கள்.முக்கியமாக பெண்கள் கல்விகற்கக்கூடாது,பாடசாலைக்கு செல்லக்கூடாது. என்று அதிகாரம் செய்தார்கள்.வாய்ப்பேச்சாகவும் மிரட்டலாகவும் இவற்றைக்கூறிவந்த தலிபான்கள் 2009 இல் இவற்றை சட்டமாகவே ஆக்கிவிட்டிருந்தார்கள்.மலாலா வாழும்பகுதியில் மட்டும் 400 மேற்பட்ட பாடசாலைகள் தலிபான்களினால் தகர்க்கப்பட்டன.50 000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். 2009 இல் மலாலாவிற்கு 11 வயதிருக்கும்போது புனைபெயரில் பி.பி.சி யின் உருது மொழி பிளாக்கினூடாக பாகிஸ்தானில் தலீபான்களின் ஆட்சியின் கீழ் தனது வாழ்க்கை,தலிபான்க