வாலி-வாலில்லையே எப்படி வாலியானாய்?
ஒருமுறை வாலியென்ற கையொப்பமுடன் வாலி வரைந்த பாரதியின் படத்தை வாங்கிப் பார்த்த தமிழ் வாத்தியார், படத்தைப் பாராட்டியதோடு நக்கலாக வேறொன்றையும் சொன்னார். “உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலின்னு பேர் வெச்சுக்கிட்டே?” அதைக் கேட்டு சுற்றி நின்ற மாணவர்கள் சிரிக்க, வாலி ஒரு துண்டுச் சீட்டில் இப்படிப் பதில் எழுதிக் கொடுத்தார். “வாலில்லை என்பதனால் வாலியாகக் கூடாதா? காலில்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா?” All India Radio வில் ஆரம்பத்தில் பணிபுரிந்தவர் பின்னர் நண்பர்களுடன் நேதாஜி என்ற பத்திரிகையை வெளியிட்டார் முதல் பிரதியை வெளியிட்டவர் யார் தெரியுமா கல்கி. அந்தகையெழுத்துப்பத்திரிகையில் சேர்ந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவர்தான் எழுத்தாளர் சுஜாதா. இயற் பெயர் ரங்கராஜன் சைக்கிள் காப்பில் ஆட்டோ ஓட்டுவதில் வாலி வல்லவர் உதாரணம் வேண்டுமா? தசாவதாரம் படத்தில் கல்லைமட்டும் கண்டால் கடவுள் தெரியாது பாடல் கேட்டிருப்பீர்கள்..அதில் ஒரு வரிவரும் நீங்கள் கவனித்திருக்கலாம்.." நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்க ராஜன்தான்" எந்த ரங்கராஜன் என்று நினை