ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-03(ராக்கிங்க்)


இதன் முன்னைய பதிவில் விரிவுரைகள் முக்கியமாக அதிக பயனுள்ளதாக இருந்த பாலியல்கல்வி தொடர்பான விரிவுரைகள் தொடர்பாக பார்த்தோம் இவை முரண்பாட்டுமுகாமைத்துவம் என்ற தலைப்பினூடு நடத்தப்பட்ட விரிவுரைகள். இதே தலைபின் கீழ் அடுத்து ஒரு விரிவுரை நடத்தப்போகின்றோம் அதற்கு சாப்பாடு வழங்குமிடமான மெஸ்ஸிற்கு செல்லுமாறு கூறினார்கள்.சென்றோம் அங்கே சென்று அனைவரும் அமர்ந்தோம்  ஒவ்வொரு குழுவும் இப்போது முரண்பாட்டு முகாமைத்துவம் தொடர்பில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை செய்துகாட்டவேண்டும் என்று கூறினார்கள்.ஏ யில் இருந்து ஏஜ் வரைக்குழுக்கள் இருந்தன.ஒரு குழு முன்னே சென்று  நாடக பாணியில் ஒன்றை செய்தார்கள்  தரப்பட்ட தலைப்பு தொடர்பில் நாடகம் ஒன்றைசெய்வோம் என்று அக்குழுவைச்சேர்ந்த போய்ஸ் கூற ஆரம்பிக்க கேர்ல்ஸ் இல்லை இல்லை வேறு கொன்செப்டைசெய்வோம் என்று கருத்துமோதலில் ஈடுபட்டார்கள் முடிவில் இப்படி  கருத்துமோதலில் ஈடுபடுவதைவிடுத்து புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளவேண்டுமென தமது நாடகத்தை முடித்தார்கள்.இவ்வாறு ஒவ்வொரு குழுவும் ஒவ்வொன்றை செய்துகாட்டினார்கள்.இவை முடிந்ததும் புரொஜக்ரரில் சிலைடர் சிலைடராக அடுத்த விரிவுரை ஆரம்பமானது.விரிவுரையின் தலைப்பு "ராக்கிங்க்"

 ஒரு ரான்சிலேட்டர்தான் அந்தவிரிவுரையை நடத்தினார்.அவருக்கு தமிழ் நன்றாகவே தெரியும்.தமிழ்மாணவர்களுக்கு,சிங்கள மாணவர்களுக்கு என தனித்தனியாகத்தான் இந்த விரிவுரை நடத்தப்பட்டது.

ராக்கிங்க் என்றால் என்ன? இது இன்றைக்கு ஒரு முக்கியபிரச்சனை.அனைவரும் அறிந்திருப்பீர்கள். நீங்கள் இந்தப்பயிற்சிமுடிந்ததும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்துக்கு போகப்போகின்றீர்கள் அங்கே உங்களை வரவேற்க உங்கள் சீனியர் காத்துக்கொண்டிருப்பார் ஆனால் அவர்கள் காத்துக்கொண்டிருப்பது உங்களை வரவேற்பதற்காக அல்ல உங்களை பகிடிவதை செய்வதற்கு. என் நண்பர் ஒருவர் கூறினார் நான் சீனியராக பல்கலைக்கழகத்தில் ராக்கிங்கிற்கு காத்துக்கொண்டிருந்தேன் அப்போது ஜூனியர் பெண்களை பல்கலைக்கழகத்துக்கு கொண்டுவந்துவிடும் பேரன்ஸைக்கண்டால் சிரிப்பாக இருந்தது.ஆனால் நான் என்னுடைய மகளுடன் பல்கலைக்கழக வாசலைமிதிக்கும்போது அப்போது அந்த தந்தைபட்ட துன்பம் என்னவென்று எனக்குப்புரிந்தது.சரி  ராக்கிங்க் என்றால் என்ன.சிலைடரில் ஓடியது

Ragging is a verbal, physical or psychological abuse on newcomers to educational institutions. It is similar to the American phenomenon known as hazing. Sri Lanka is said to be its worst affected country in the world.It involves insults (simple or suggestive sexual, sarcastic and even physical), running errands for seniors, and many other complex activities

முன்னைய பதிவு- ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-02(பாலியல் கல்வி)
உடல் ரீதியான அல்லது மன ரீதியான துன்புறுத்தல்கள் பல்கலைக்கழகங்கள் போன்ற கற்பித்தல் நிலையங்களில்  இவை சீனியர் மாணவர்களினால் நடத்தப்படுகின்றன.இது தனிப்பட்ட ஒரு மனிதனை அவமானப்படுத்தும் செயற்பாடாக கருதப்படுகின்றது.இது ஒருவகை மனித உரிமை மீறல்தான்.இது உடல் ரீதியான தாக்குதல்களைக்கடந்து  பாலியல் ரீதியான தாக்குதலாக பகிடிவதை மாறும்போதுதான் அது மிக மோசமடைகின்றது.
(எமது ரான்சிலேட்டர் தொடர்ந்து பேசுகின்றார்)

எனக்குத்தெரிந்த ஒரு பாதிரியார் இருக்கின்றார்.அவர் பாதிரியார்களுக்கு கற்புக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஜூனியராக சேர்ந்தார்.அவருக்கும் ராக்கிங்க் கொடுக்கப்பட்டது பேனாவால் 6 கிலோமீட்டர்கள் அளக்கவேண்டும் என்பதுதான் அவருக்குக்கொடுக்கப்பட்ட தண்டனை.அவர் அதை ஒழுங்காக செய்யவேண்டும் கொஞ்சம் பிழைத்தாலும் ஆரம்பத்தில் இருந்து மீண்டும் அளக்கசெல்லிவிடுவார்கள் சீனியர்கள்.அந்த சீனியருக்குத்தான் 6 கிலோமீட்டர் முடிவு எங்கிருக்கின்றது என்பது தெரியும்.இவருக்கு பின்னேரம் 6 மணிக்கு ஆரம்பிக்குமாறு கூறினார்கள்.அவரும் செய்ய ஆரம்பித்தார். அடித்த நாள் காலை 7 மணிவரை அதை தொடர்ந்து செய்தார்.அப்போது வீதியில் காரில் சென்றவர்கள் காரை நிறுத்திவிட்டு கூறினார்களாம் யார் இந்தப்பைத்தியக்காரன் உடையேதும் இல்லாமல் ரோட்டில் என்ன செய்கிறான் என்று.
ஆம் அவருக்கு மேலதிகமாக கூறியிருந்தார்கள் அந்த 6 கிலோமீட்டர் தூரத்தை உடைஏதுமில்லாமல் அளக்கவேண்டும்.இதை அந்தப்பாதிரியார் ஒரு  நிகழ்ச்சியில் மேடையில் வைத்துக்கூறிக்கொண்டிருக்கின்றார். அவர் ஒரு பாதிரியார் நாம் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றோம் அவருக்கு அப்படி ஒன்று நடந்திருக்கும் என்று நாம் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை.
அவர் மேலும் கூறினார்.எனது நண்பன் ஒருவனுக்கும் இதே  ராக்கிங்தான் வழங்கப்பட்டது அதனால் அவன்  மனதளவில் மிகவும் குழம்பி பைத்தியமாகிவிட்டான் இப்போது அவன் எனக்குத்தெரிந்த ஒரு ரெயில்வே ஸ்ரேஸனில் பிச்சைஎடுத்துக்கொண்டிருக்கின்றான்.இது போன்ற பல சம்பவங்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று கூறிமுடித்தார்.கேட்டுக்கொண்டிருந்தோம் வயித்தில் லேசாக புளியைக்கரைத்ததுபோல்தான் இருந்தது.

2 ஆம் உலகயுத்தத்தில் பல்கலைக்கழகமாணவர்கள் இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டார்கள்.இராணுவ வீரர்களாக இருக்கும்போது இப்பகிடிவதை ஒரு  நிகழ்ச்சியாக இடம்பெற்றது.அடித்த நாள் இருப்போமா இல்லையா என்று தெரியாது எனவே ஒருவருக்கொருவர் பகிடிவதை செய்து மகிழ்ச்சியடைந்தார்கள்.போர் முடிந்ததும் மீண்டும் பல்கலைக்கழகங்களுக்குத்திரும்பிய மாணவர்கள் அவற்றை தமது பல்கலைக்கழகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.அது  அப்படியே தொடர்ந்து மாற்றமடைந்து வன்முறையும் அதனோடு இணைக்கப்பட்டுவிட்டது.


அவர்  பவர் பொயிண்ட் சிலைடரில் காண்பித்த அனைத்தும் விக்கிபீடியாவின் துணைகொண்டு எடுக்கப்பட்டது அவை கீழே..


Introduction
Inception of ragging can be pleasant at first, hence the name Mal Samaya. During this week or so, all newcomers are ordered to memorize the name and hometown of their peers. The objective of this exercise is said to be increasing the friendship among batch mates (locally termed as batch fit).

Dress code ragging

The freshmen are asked to dress in a specific dress code for a particular period of time. For the dress code prescribed is generally weird, e.g. dressing totally in white or black with the hair oiled and combed in a particular style, dressing shirts that do not contain stripes, dressing long skirts for girls. The dress code ragging may make the freshmen feel awkward and uncomfortable as it often brings them unnecessary attention from everybody else.

Playing the fool
The freshmen may be asked to do silly things like climbing a tree, kissing a tree, proposing to someone from the opposite sex, holding a hand of someone from opposite sex and walking etc.


Verbal torture
Verbal torture involves indulging in loose talks. The freshmen may be asked to sing the lyrics of any vulgar song or use abusive language in the presence of a large number of peers. During this time, seniors assign an abusive and demeaning nickname, known as card to the juniors and they have to be called by that name throughout their entire university life. In some universities, this nickname is changed to a less vulgar name after the ragging period. These aliases are used primarily as a means of preventing the university authorities identifying the students who are involved in ragging and other unlawful activities. The form of verbal ragging differs from one institution to another. In some universities, students have to memorize poems made up of filth and recite them in front of others.

Physical torture

This is the severest form of ragging that could take place in a university. Some seniors are mainly interested in details such as the anatomical description of one’s body parts, his or her sexual interests etc. In many cases, the freshmen have been asked to strip before the seniors. However, sexual abuse of female students remains rare. Outstation students who stay in hostels are most vulnerable to ragging. They may be asked to do odd acts such as having showers several times per day, and having showers around midnight with cold water. Some extreme cases like inserting candles in vaginae (as in the case of Rupa Rathnaseeli), putting testicles in a drawer and having it closed, pushing straightened out coat-hangers into ears, striking the penis over a long period of time (termed bonchi kadeema) are also reported.[5] This period of time is termed Bheeshana Samaya in university jargon.
சில சீனியர் மாணவர்கள் ஒருவரது உடலின் பாகங்களை பாலியல் ரீதியாக விபரிக்குமாறு கூறுவார்கள்.சீனியர் மாணவர்களின் முன் ஆடைகளைக்களையுமாறு கூறப்படுவார்கள்,ஆனால் பெண்களை பாலியல் துன்புறுத்தும் ஆண்கள்தொடர்பிலான பகிடிவதைகள் மிகக்குறைவாகத்தான் நடைபெறுகின்றது.வெளியில் தங்கும் மாணவர்களைவிட பல்கலைகழகவிடுதிகளில் தங்கும்மாணவர்களே மிகவும் பாரதூரமாக பாதிக்கப்படுகின்றார்கள்.ஒரு நாளுக்கு அதிக தடவைகள் குளிக்குமாறு வற்புறுத்தப்படுவார்கள்,சீனியர் மாணவர்களுக்கு முன்னால் குழுவாக நின்று சுய இன்பம் அனுபவிக்குமாறும் கட்டளையிடப்படலாம்,இரவில் குளிரான நீரினால் குளிக்குமாறு கட்டளையிடப்படலாம்,பெண்களின் பெண்ணுறுப்பிற்குள் மெழுகுவர்த்திகள் செருகப்பட்டிருக்கின்றது,விதையை அலுமாரிக்குள் இட்டு அலுமாரியின் கதவுகள் சாத்தப்படலாம், நீண்ட நேரம் ஆண்குறியை பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கவேண்டியேற்படலாம் மாணவர்களால் இவை  தொடர்பான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பகிடிவதையால் நடந்த முக்கிய சம்பவங்கள்,இடங்கள்(இலங்கையில்)


In 1974, ragging of some trainee mathematics teachers at the then Vidyalankara University (now University of Kelaniya) prompted Prime Minister Sirimavo Bandaranaike's Government to appoint V. W. Kularatne Commission to probe the incident. As a result, twelve undergraduates were expelled and four officials were penalised for their failure to take appropriate action. This is the first major step taken against university ragging by a Sri Lankan government.

In 1975, University of Peradeniya reported the first ragging related death when a 22 year old female student of the Faculty of Agriculture, Rupa Rathnaseeli became paralyzed as a result of jumping from the second floor of the hostel "Ramanathan Hall" to escape the physical ragging carried out by her seniors. It was reported that she was about to have a candle inserted in her vagina just before she had jumped out of the hostel building.[5] She committed suicide in 1997
இலங்கையில் ராக்கிங்க் மூலம் மரணத்தை ஏற்படுத்திய முதல் முதல் யூனிவேர்சிட்டி என்ற பெருமை பெரதேனியாப்பல்கலைக்கழகத்தைசாரும்.22 வயதையுடைய Rupa Rathnaseeli  என்ற மாணவி ராமனாதன் ஹோல் என்ற ஹொஸ்ரலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார் ராக்கிங்கில் இருந்து தப்புவதற்காக. அவரது பெண் உறுப்பிற்குள் மெழுகு திரியை நுழைத்து பகிடிவதை செய்யப்பட்டதே இதற்கு முக்கியகாரணம்.

In 1993, Chaminda Punchihewa, a student of University of Ruhuna, died as a result of ragging.[a]
Prasanga Niroshana, a student from Hakmana, died as a result of ragging he underwent at Schools of Agriculture, Angunakolapallassa.[a]

In 1997, 21 year old S. Varapragash, an Engineering student of University of Peradeniya, died from a kidney failure following severe ragging by senior students(கிட்னி பெயிலியரால் இறந்தமாணவன்)

A a first year female student of University of Ruhuna committed suicide in 1997 as a result of ragging.(ருகுன பல்கலைக்கழகத்தின் முதலாவது தற்கொலை)

In 1997, Kelum Thushara Wijetunge, a first year student at the Hardy Technical institute in Ampara, died from a kidney failure after he was forced to do tough exercises and drink excessive quantities of liquor.(அம்பாறையில் மானவன் கிட்னி பெயிலியராகி இறந்தான் அதிகமாக மதுபானத்தை  அவனுக்கு வழங்கியதுதான் முக்கியகாரணம்)

In 2002, Samantha Vithanage, a third year Management student at the University of Sri Jayewardenepura, who pioneered an anti-ragging campaign was killed at a meeting, while in a discussion on ragging.(சிறீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் 3 ஆம் வருட முகாமைத்துவ பீட மாணவன் ஒரு அன்ரிராக்கராக 3 ஆம் வருடத்தை தொடர்ந்தார் ராக்கிங்க் பற்றிய ஒரு கலந்துரையாடலில் Samantha Vithanage என்ற அம்மாணவன் கொலைசெய்யப்பட்டான்)

In 2006, Prof. Chandima Wijebandara, the Vice Chancellor of University of Sri Jayewardenepura resigned from his post as a result of students failing to comply with his orders to eliminate ragging from the university.

In 2011, a female student attached to the Faculty of Humanities and Social Sciences, University of Ruhuna, was semi-paralysed in one limb as a result of ragging she underwent at the faculty canteen.

World wide-


அவர் இவற்றை புரொஜெக்டரில் போட்டுக்காட்டிக்கொண்டு கேட்டார்.உங்களில் ராக்கிங்க் என்பது தேவைதான் என்று நினைபவர்கள் கைகளை உயர்த்துங்கள்.கேர்ஸில் ஒருவரும் உயர்த்தவில்லை போய்ஸில் சிலர் உயர்த்தினார்கள் நானும் உயர்த்தினேன்.

எங்களை ராக்கிங்க் செய்தால் பரவாயில்லை நாம் ராக்செய்வதை அனுமதிக்கின்றோம் என்று நினைப்பவர்கள் கைகளைத்தூக்குங்கள்.அதற்கும் சிலர் உயர்த்தினார்கள்.ஏன் ராக்கிங்தேவை என்று நினைக்கின்றீர்கள் என்று கூறமுடியுமா?கையை உயர்த்தியவர்கள் கூறுங்கள்.(நீலத்தால் காட்டப்படுவது எமக்கு விரிவுரை செய்தவரின் கூற்றுக்கள்)

மாணவர்கள் எழுந்து காரணங்களைக்கூறுகின்றார்கள்-

ஜூனியராக செல்லும் மாணவர்களிடத்தே ஒரு ஒற்றுமையை(batch fit) வளர்க்கின்றது...

எப்படி? நீயும் ராக்பண்ணப்பட்டாய் நானும் ராக்கிங்க்பண்ணப்பட்டேன் அப்படித்தானே..ம்ம் ஓகே அடுத்தது

நான் எழும்பிக்கூறினேன்...மேடைக்கூச்சம் போன்றவற்றை இல்லாது செய்யமுடியும் என்று..(நான் ராக் செய்வதாக இருந்தால் சகலருக்கும் முன்னால்வந்து எதைப்பற்றியாவது பேசு அல்லது 2 வரி பாடுமாறு கேட்பதாக  முடிவு செய்திருந்தேன்..இதனால் இந்த மேடைக்கூச்சம் இல்லாது போகும் என்பது என் நம்பிக்கையாக இருந்தது)

அதாவது முன்னுக்கு வருவதற்கு வேறுயாருடனும் பேசுவதற்குபயப்படுபவர்களின் பயத்தை ஒளிக்கமுடியும்..ம்ம் அடுத்து

ஜூனியேர்சிடம் பாரபட்சங்கள் குறையும்...

அதாவது ஜூனியராக வருபவர்களில் பணக்காரன் ஏழை இருப்பார்கள் சகலரையும் ராக் பண்ணுவதால் அந்த சம நிலை பேணப்படுகின்றது என்கிறீகள்

ராக் செய்தால்தான் ஜூனியேர்ஸ் மதிப்பாங்கள்

அதாவது ஒருவரின் திறமையினாலோ நல்ல செயலினாலோ மரியாதை வராது எனவே ராக் செய்வதன் மூலம் அதைப்பெற்றுக்கொள்ளல் ஓகே 


இப்போது இவர்கள் கூறிய  அதே காரணங்களைத்தான் சீனியேர்ஸும் கூறுகின்றார்கள்.அதோடு superiority complex  என்ற விடயமும் இருக்கின்றது.அத்துடன் வேறு காரணங்கள் யாராவது?

இப்போது இருக்கும் சீனியர்ஸ் முன்னர் ஜூனியேர்ஸாக இருக்கும்போது தமது சீனியர்களிடம் வாங்கிய அடிகளை திருப்பி அவர்களுக்கு வழங்கமுடியாது  அதை ஜூனியேர்ஸிடம் தீர்த்துக்கொள்கின்றார்கள்.

Everybody wants to become heroes,and the cowards are not an exception. And ragging is the only way by which they could do some "heroisms".These nonsense idiots somehow develops a feeling that they are on the top of the world , when they are harassing somebody in the name of ragging.
And definitely the guys who shows such ""heroisms" are the biggest zeros in their real life.They might be the biggest bafoons among their friends,useless in the home,and a garbage in the society. This "useless,baffooonish, waste" feeling will be creeping high on them,and they will find pleasure and satisfaction while doing ragging by becoming 'a hero in their own mind'.

ராக்கிங்க் பற்றிய கட்டுரை ஒன்று by-Nishika Fonseka

Ragging in our universities: A symptom or a disease?

ஒருவரை துன்பப்படுத்தி அதன் மூலம் இன்பம் காணல் என்பது ஒருவித மனோவியாதியாக இருக்குமெனில் அதை ராக்கிங்க் செய்பவர் உணரப்போவதில்லை..ஒரு மன நிலைபாதிக்கப்பட்டவரால் தான் மன நிலைபாதிக்கப்பட்டவன் என்பதை முழுமையாக உணரமுடியாது.உணரவும் விரும்பமாட்டான்/டாள்.முயற்சி செய்து எந்தபயனும் இல்லை.ஆனால் மன நிலைக்காப்பகத்தில் கவுன்சிலிங்க்வேண்டுமானால் செய்யலாம்.

ஆனால் நீங்கள் பல காரணங்களைக்கூறினாலும் உலக அளவில் செய்யப்பட்ட ஆய்வு என்ன கூறுகின்றது தெரியுமா.ராக்கிங்க் என்பது ஒரு மாணவனின் தலைமைத்துவப்பண்பையோ ஆளுமையையோ வளர்க்கவில்லை.மாறாக அது அவனை இல்லாமல் செய்கின்றது அழிக்கின்றது.ம்ம்ம் அப்போதுதான் எனக்கு உறைத்தது சரிதான் கட்டாயத்தின்பேரில் முன்னால் வந்து பேசுபவன் அதன்பிறகு தானாக வருவானா என்றால் இல்லை.அதோடு இன்னொன்றும் இருக்கின்றது.எம்மை விட பின்னர் வந்த  ஜூனியேர்ஸ் தம்மை மதிக்கவேண்டும் என்பதற்காக ராக்கிங் செய்வது சரியென்றால்  இலங்கையில் பெரும்பான்மை இனம் எங்களை அடக்கமுயல்வதில் என்ன தவறு இருக்கின்றது இரண்டும் ஒன்றுதானே?

அதோடு கூறினார் ராக்கிங்செய்பவர்கள் ஒருவகையில் மன நோயாளிகள்.இன்னொருவரின் துன்பத்தை ரசிப்பதன்மூலம் தாம் இன்பங்காண்பவர்கள். அவர்கள் வளர்ந்த விதம் சமூகக்காரணிகளால் இப்படியானவர்கள் தோற்றுவிக்கப்படுகின்றார்கள்.ராக்கிங்கால் பலர் தற்கொலை செய்துள்ளார்கள்.இலங்கைப்பல்கலைக்கழகங்களில் பல தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன.பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள்  எல்லைமீறும்போது இவை ஏற்படுகின்றன.

தனக்கு நடந்த சம்பவம் ஒன்றைப்பற்றிக்கூறினார் அவர்.

எனது தங்கையை ஆசிரியர்கலாசாலைப்பயிற்சிக்காக  ஒரு பல்கலைக்கழகத்துக்குசெல்லவேண்டியிருந்தது. நான் என் தங்கையை அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன் பல பெண்களின் சகோதரர்கள்,பெற்றோர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.யுத்தகாலம் ஆகையால் ஆண்களின் பெற்றோரும் வந்திருந்தார்கள்.அப்போது  17 இடங்களில் 17செக்பொயிண்ட்களில்(இராணுவப்பரிசோதனைச்சாவடிகள்) ஆண்கள் பெண்கள் என எங்கள் அனைவரையும் முழுமையாக பரிசோதனை செய்து பரிசோதனை செய்து அனுப்பினார்கள் அண்ணளவாக 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்தோம் வந்ததும் எமக்காக காத்து நின்ற சீனியர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.அனைவரையும் உடனே ஒரு அறைக்கு வருமாறு அழைத்தார்கள்.அங்கு அனைத்து ஜூனியருக்கும் ராக்கிங்க் கொடுக்கப்பட்டது.ஒருவர் பின்னால் ஒருவர் ரெயில் வண்டியைப்போல் பிடித்துக்கொண்டு ஓடவேண்டுமாம் அந்த அறைக்குள்.பெரும்பாலான பெண்கள் அழஆரம்பித்துவிட்டார்கள்.என்னால் பொறுக்கமுடியவில்லை.அண்ணளவாக 8 மணித்தியாலங்கள் வீதியில் நடந்து அங்கு சென்றிருந்தோம் தண்ணியில்லை சாப்பாடில்லை ஒண்டுக்கு ரண்டுக்குக்கூட போக வழியில்லை.சோதனைச்சாவடிகளில் முழு உடமையையும் பரிசோதனை செய்துகளைத்துப்போய் 8 கிலோமீட்டர் தூரம் நடந்துவரும் எங்களை இப்படியா நடத்துவது? பெற்றோர் வேறு பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைவருக்கும் இதே நிலைதான். நான் போய் ஒரு சீனியரை அழைத்துக்கேட்டேன்.என்ன நியாயம் இப்படியா செய்வது இங்கே இருக்கும் எத்தனை பெண்கள் இன்னும் ரொய்லெட்டுக்குபோனார்கள் என்று தெரியாது.சாப்பிட்டார்களா என்று தெரியாது.கொண்டுவந்த சுமைகளுடன் 8 கிலோமீட்டர் தூரம் நடந்தே அனைவரும் வந்திருக்கின்றோம்.யாரும் வரும் வழியில் ஓய்வெடுக்க வில்லை.இங்கே பலரின் பெற்றோரும்வந்திருக்கின்றார்கள் இதுதான் நீங்கள்  உங்கள் சீனியேர்ஸை வரவேற்கும் முறையா?
அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

 இப்பதான் இப்படி ராக்கிங்க் பீரியட் முடியட்டும் பாருங்க நான்க ஒன்னுக்குள்ள ஒன்னா அவளவு பிற்றா இருப்பம்...




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்