வானம்/பிரபஞ்சம் ஏன் இருளாக இருக்கின்றது?
வானம் ஏன் இருளாக இருக்கின்றது? அதைப்பற்றி சிந்தித்திருக்கின்றீர்களா?என்ன வெங்காயக்கேள்வி சார் இது?பகலில் சூரியவெளிச்சம் இருக்கும் சோ வெளிச்சமாக இருக்கும் இரவில் சூரிய ஓளியைப்பூமி மறைப்பதன் காரணமாக சூரிய ஒளிவரும் பகுதியில் பூமி இருப்பதால் அது இருளாக இருக்கின்றது.இப்படி நீங்கள் நினைத்தால் கேள்வியைப்புரிந்துகொள்ளவில்லை.முதலில் வானம் அல்லது ஆகாயம் என்று தனி ஒரு பௌதிகப்பொருள் இல்லை.வேண்டுமானால் ஸ்பேஸ் என்று கூறிக்கொள்ளலாம் வெளி என்றும் கூறலாம்.பூமியின் வாயுமண்டலத்தை கருதாதுவிடின் நாம் நேரடியாக விண்வெளியுடன் தொடர்பில் இருக்கின்றோம் என்பதுதான் உண்மை.சோ கேள்வி இதுதான் பூமியில் இருந்துவானத்தைப்பார்க்கின்றோமல்லவா அந்தவானம் ஏன் இருளாக இருக்கின்றது?இன்னும் தெளிவாகக்கூறினால் பிரபஞ்சம் ஏன் இருளாக இருக்கின்றது? பிரபஞ்சத்தில் அண்ணளவாக 100 பில்லியன் கலக்ஸிக்கள் உள்ளன.மில்லியன் கணக்கான நட்சத்திரங்களும் உள்ளன.சாதாரண ஒரு குண்டு பல்ப்பு ஒரு அறையை ஒளிர்விக்கும்போது மில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தை ஒளிர்விக் தேவைக்குமேல் போதுமானவை.ஆனால் இரவு வான் பல நட்சத்திரங்களுடன் இருளாகத்தான் இருக்கின