இடுகைகள்

science and technology லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வானம்/பிரபஞ்சம் ஏன் இருளாக இருக்கின்றது?

படம்
வானம் ஏன் இருளாக இருக்கின்றது? அதைப்பற்றி சிந்தித்திருக்கின்றீர்களா?என்ன வெங்காயக்கேள்வி சார் இது?பகலில் சூரியவெளிச்சம் இருக்கும் சோ வெளிச்சமாக இருக்கும் இரவில் சூரிய ஓளியைப்பூமி மறைப்பதன் காரணமாக சூரிய ஒளிவரும் பகுதியில் பூமி இருப்பதால் அது இருளாக இருக்கின்றது.இப்படி நீங்கள் நினைத்தால் கேள்வியைப்புரிந்துகொள்ளவில்லை.முதலில் வானம் அல்லது ஆகாயம் என்று தனி ஒரு பௌதிகப்பொருள் இல்லை.வேண்டுமானால் ஸ்பேஸ் என்று கூறிக்கொள்ளலாம் வெளி என்றும் கூறலாம்.பூமியின் வாயுமண்டலத்தை கருதாதுவிடின் நாம் நேரடியாக விண்வெளியுடன் தொடர்பில் இருக்கின்றோம் என்பதுதான் உண்மை.சோ கேள்வி இதுதான் பூமியில் இருந்துவானத்தைப்பார்க்கின்றோமல்லவா அந்தவானம் ஏன் இருளாக இருக்கின்றது?இன்னும் தெளிவாகக்கூறினால் பிரபஞ்சம் ஏன் இருளாக இருக்கின்றது? பிரபஞ்சத்தில் அண்ணளவாக 100 பில்லியன் கலக்ஸிக்கள் உள்ளன.மில்லியன் கணக்கான நட்சத்திரங்களும் உள்ளன.சாதாரண ஒரு குண்டு பல்ப்பு ஒரு அறையை ஒளிர்விக்கும்போது மில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தை ஒளிர்விக் தேவைக்குமேல் போதுமானவை.ஆனால் இரவு வான் பல நட்சத்திரங்களுடன் இருளாகத்தான் இருக்கின

மாற்றான் ஸ்பெஸல்- இரட்டையர்கள்

படம்
இணைந்துள்ள இரட்டையர்களைப்பற்றி  நாம் ஓரளவிற்கு அறிந்திருக்கின்றோம்.அண்மையில் திரைக்குவந்த சூர்யாவின் மாற்றான் திரைப்படத்திலும் சூரியா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்திருந்தார்.படத்தில் இருக்கும் பல லொஜிக் பிழைகளுடன் ஒரு பிழை என்னவெனில் இருவரில் ஒருவருக்குத்தான் இதயம் இருப்பதாக காட்டியிருக்கின்றார்கள்.ஆனால் இருவரும் பறந்து பறந்து அடிபடுகின்றார்கள்.சாதாரணமாக ஹார்ட்டில் ஹோல் வந்துவிட்டாலே ஒருவரால் வேகமாக ஓடமுடியாது காரணம் ஒட்சிசன் போதாது(இது  ஒட்சிசன் அற்ற குருதியும் ஒட்சிசன் உள்ள குருதியும் கலப்பதால் போதிய ஒட்சிசன் கொண்ட குருதி உடலுக்கு போதாமை காரணமாக ஏற்படும்) படத்தில் ஒரு இதயத்துடன் இருவர் சாகசம் செய்கின்றார்கள்.இருவருக்கும் நிச்சயமாக ஒரு இதயத்தின் குருதி போதவே போதாது.அப்படி இதயம் இருக்கவேண்டுமானால் வழக்கத்தைவிட பெரிய இதயமாக இருக்கவேண்டும்.அந்த இதயத்துடன் இப்படி பறப்பது ரொம்பவும் ஓவர்.இவ்வாறு ஒரு இதயத்துடன் ஒட்டிப்பிறக்கும் இரட்டையர்களை  thoracopagus twins என்று கூறுவார்கள்.இந்தவகை இரட்டையர்களில் 75% ஆனவர்கள் தம்முள் இதயத்தை பகிர்ந்துகொள்வார்கள்.அதாவது ஒரு இதய

எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தும் Batteries எப்படி இருக்கும்?

படம்
மின்கலங்கள்  மின்சக்தியை இரசாயனசக்தியாக சேமித்துவைத்திருப்பவை.முதலாவது மின்கலம்    Alessandro Volta இனால் 1800 இல் அமைக்கப்பட்டது.செப்பு, நாகத்தகடுகளுடன் மேலும் மெருகூட்டப்பட்ட வடிவம் 1836 இல் டானியல்லினால் உருவாக்கப்பட்டது.இவர்கள்தான் நமது இன்றைய மின்கலத்தின் முன்னோடிகள்.ஆரம்பத்தில் உலக அளவில் சக்திமுதலுக்காக இது பயன்படுத்தப்படாதுவிடினும் தற்பொழுது உலகம் முழுவதிலும் சக்திமுதலாகப்பயன்படுத்தப்பட்டுவருகின்றது.இதற்கு ஆதாரமாக மின்கலங்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் வருடத்திற்கு 46 பில்லியன் டொலர்களை ஈட்டுகின்றன. காலாகாலமாக மின்கலங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.பயன்படுத்துவோம் எறிந்துவிடுவோம்.சில மின்கலங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் சார்ஜ் ஏற்றிப்பயன்படுத்தலாம்.ஆனால் எவ்வளவு காலம்தான் இப்படியே பயன்படுத்துவது.இதன் காரணமாக சில டிஸைனேர்ஸ் எதிர்கால மின்கலங்களை வடிவமைத்துள்ளார்கள்.இவை எதிர்காலத்தில் பயன்பாட்டுக்குவரலாம்.இவற்றால் சூழலுக்கு பாதிப்பும் குறைவு செலவும் மிச்சம். மின்கலத்தின் வரலாறு Wind-Up Batteries உங்களது மின்கலத்தில் சார்ஜ் முடிந்துவிட்டது என்றால் க