கருணைஉள்ளங்கள் உதவி செய்யுங்கள்
பெயர் : மகேந்திரன் பதுசன் வயது : 15 ஆண்டுகள் மேற்படி மாணவன் கடந்த சிலவருடங்களுக்கு முன் செல் சிதறல்கள் பட்டு ஒரு கண் பார்வையை இழந்தான். இம்மாணவன் யாழ் விக்ரோரியா கல்லூரியில் தரம் – 10 ல் கல்விகற்று வருகின்றான். இம்மாணவன் தனது கண்பார்வையை இழந்திருந்தாலும் தலைக்குள் இருக்கும் சிதறல்களை அகற்றும் நிலையில் சுயமான வாழ்க்கையில் ஈடுபடுவான். தனது கல்வியையும் தொடர முடியுமான நிலையை எட்டுவான். இந்த மாணவனின் மருத்துவத்திற்கு ரூபா 250000/= தேவைப்படுகின்றது. இதற்காக பணம் சேகரிக்கப்படுகின்றது. எம்மினிய கருணை உள்ளங்களே இந்தச்சிறு பிள்ளையின் மருத்துவ செயல்ப்பாட்டின் தேவை கருதி தங்களால் முடிந்தளவு நிதியினை வழங்கி இந்த பிள்ளையை மருத்துவரீதியாக குணமாக்க முன்வருவோமாகையால் இந்தப் பிள்ளையின் எதிர்காலக் கல்வி நிலை சிறப்பாக அமையும்.கருணையுள்ளங்கள் உதவி செய்யவும். உதவி செய்ய விரும்பும் கருணை உள்ளங்கள் வறுமையின் கரங்கள் அமைப்பு , கைதடி யாழ்ப்பாணம் என்ற முகவரியுடனோ அல்லது என்ற 021 490 7902, 021 320 1361 தொலைபேசி இலக்கங்களினுடனோ தொடர்பு கொள்ளவும் நன்றி.