"பூமனச்சுணை" மனதைத்தொட்ட சிறுகதை...
நீண்டகாலத்திற்குப்பிறகு மீண்டும் வலையுலகத்திற்கு..... எப்படி இருக்கின்றீர்கள்? சகோக்களே?... சிறியகால இடைவெளியின் பின்னர் மீண்டும் எழுதுவதற்கு நேரம்கிடைத்திருக்கின்றது.... சிறிய கால இடைவெளியில் மீண்டும் எழுதுவதற்கே நீங்கள் ஏன் இப்பொழுது எந்தப்போஸ்ட்டையும் போடுவதில்லை என்ற கேள்விகள் உள்ளடங்கலாக ஏதாவது ஒரு ஊக்கி ஏதாவது ஒரு விதத்தில் தேவையாக இருக்கின்றது... நம்மைப்போன்ற பதிவர்கள் எதிர்ப்பார்ப்பவை இவைதானே... நிற்க என்னை மீண்டும் இழுத்துவந்தது ஒரு சிறுகதை,முடிவெட்ட சென்ற இடத்தில் பழைய ஆனந்தவிகடன் ஒன்று கைகளில் கிடைத்தது முடிவெட்டுவதற்கு எமது அழைப்பு வரும்வரை ஒரக்கதிரையில் அமர்ந்திருக்கவேண்டும்...அருகாமையில் செய்தித்தாள்கள் அடுக்கப்பட்டிருக்கும்...அன்றைய செய்தித்தாள் கிடைக்கவில்லையாயின் ஏன் சும்மா இருப்பானேன் என்றுவிட்டு பழையபேப்பராக இருந்தாலும் ஒன்றை கையில் தூக்கவேண்டியதுதான்.வழக்கமாக வாசிப்புப்பழக்கம் இல்லாதவர்களைக்கூட முடிவெட்டுமிடம் வாசிக்கவைத்துவிடக்கூடியது.அனைவரும் கைகளில் செய்தித்தாள்களையோ அல்லது எதையோ வைத்து வாசித்துக்கொண்டிருக்க நாம் மட்டும் பேசாமல் இருந்தால் நன்றாகவா இருக்குமென