மைக்கல் ஜாக்ஸன்

மைக்கல் ஜாக்ஸன் பொப் இசையின் கடவுள்,பாடுவார் ஆடுவார் பாடிக்கொண்டே ஆடுவார்.இவரது அல்பங்கள் உலகில் அதிகம் விற்பனையாகி கின்னஸ்ஸில் இடம்பிடித்துள்ளன.6.5 கோடி கொப்பிகள்.இவரது அத்தனை அல்பங்களும் இதுவரை 20 கோடி கொப்பிகள் விற்பனையாகியுள்ளன.சாதாரணமாக ஒருவன் சண்டித்தனம் செய்தால் ப்ரூஸ்லீ என்கிற நினைப்பு என்று பேசுவோம்.யாராவது ஒரு பையன் வீதியில் ஆடிக்கொண்டிருந்தால்"ஆமா பெரிய மைக்கல் ஜாக்ஸன் றோட்டிலனிண்டு ஆடுறாராம்" இதிலிருந்து பிரபலம் தெரிந்திருக்கும்.என்னைப்பொறுத்தவரை  யாரிடமாவது நீங்கள் மைக்கல் ஜாக்ஸனா யாருய்யா அந்தாளு என்று  கேட்பவர்களிடம் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது.பாடல்களுக்கு மெய்மறந்து ஆடுவது சேர்ந்து ஆடுவது ஒரு ரகம்.ஆனால் மைக்கல்ஜாக்ஸனின் மந்திரப்பாடல்கள் ஆடல்களுக்குமுன்னால் ரசிகர்களின் நிலை விளக்கமுடியாதது.உணர்ச்சிவசப்பட்டு ஆடுவார்கள் பாடுவார்கள்,கண்ணீர்விடுவார்கள்,கதறுவார்கள் மயங்கிவிழுவார்கள்,உடைகளைக்கிழித்தெறிவார்கள்.பொலீஸ் ரசிகர்களை அடக்குவதற்கு மிகவும் சிரமப்படும்.பொலீஸ் பாதுக்கப்புக்களையும் மீறி மேடைக்கு பாய்ந்து மைக்கல் ஜாக்ஸனை அணைக்கும் ரசிகர்களையும் அவர்களை மைக்கலிடம் இருந்து பிடுங்கிச்செல்லும் பாதுகாப்பாளர்களையும் கீழே வெடியோவில் காணலாம்.


மூன்வோல்க்,ரோபோ டான்ஸ் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதே மைக்கல் ஜாக்ஸன்தான்.ஏதோ ஆடுவது பாடுவது என்றில்லை.இவரது பாடல்களில் சமுதாயக்கருத்துக்கள் அரசியல் கருத்துக்கள் அவற்றின் மீதான கோபம் போன்றவற்றையும் தனது பாடல்கள் நடனத்தின் மூலம் உணர்ச்சிபூர்வமாக  நெருப்பாக வெளிப்படுத்துவார்.ஏர்த்சோங்க் என்றபாடல் அமெரிக்கபழங்குடியினர் வாழும்பகுதி திடீரென்று இராணுவப்படையெடுப்பு டாங்கிகளால் வீடுகள் தரைமட்டமாக்கப்படுகின்றது,மரங்கள் அழிக்கப்படுகின்றது,தந்தமற்று இறந்துகிடக்கும் யானை,இடிந்து போன தனதுவீட்டின் இடிபாடுகளில் தனது மகளின் நெளிந்த சைக்கிளைக்காணும் தந்தை...அவருக்கு பழைய நிகழ்வுகள் காட்சிகளாக ஓடுகின்றன துப்பாக்கிக்குண்டால் இறந்த உறவினர்.மக்களுக்கு தாம் இழந்தவை கண்முன்னே தெரிகின்றது.இவற்றை உணர்ச்சிவசத்துடன் பார்க்கும் எந்தமனிதருக்கும் ஏதாவது செய்யவேண்டும்போல் இருக்கும் கோபம்...கடைசி கண்ணீராவது வரும்.அந்த உணர்ச்சியை ஜாக்ஸன் இந்தபாடலின் இறுதியில்ஆக்ரோசமாக வெளிப்படுத்துவார்.மக்கள் தம்மால் என்ன செய்யமுடியும் என்று முழந்தாளிட்டு வானத்தைப்பார்த்து கண்ணீர்விடுவார்கள்.இதோ இதுதான் பதில் என்று மைக்கல் ஜாக்ஸன் கதறிய கதறலில்...பூமி எதிர்ப்பக்கமாக சுற்றுகிறது.பலமான காற்று இராணுவவீரர்களை டாங்கிகளுடன் பின்னோக்கி அவர்கள் வந்த இடத்திற்கே திருப்பி அனுப்புகின்றது.இந்தப்பாடலில் காட்சிகள் கருத்துக்கள் அதிகம்.





மான் இன் த மிறர் என்ற பாடல்.லெனின் லூதர்கிங்க்,ஆபிரிக்காவுல் எலும்பும் தோலுமாக குழந்தைகள் மனிதர்கள்,அணுகுண்டு வெடித்தல்,ஹிட்லரின் பேச்சு, வீ வோண்ட் ரியல் ஹோம்ஸ் என்ற வாசகம் போன்றவை இப்பாடலில் காட்டப்படும்.இவை அனைத்துமெ வெறும்பாடல்கள்  மட்டும் அல்ல.



ஸ்ரேஞ்சர் இன் மொஸ்கோ என்றபாடலில் பிச்சைக்காரனுக்கு ஒருவர் சில்லறையை எறிவார்.அவன் அதை ஒரு மூலையில் இருந்து பிடித்துக்கொள்வான் மழை பெய்யும் வீதியில் இருப்பவர்கள் எல்லோரும் கட்டடங்களுக்குள்ளே ஓடுவார்கள்.பிச்சைக்காரன் அந்த கட்டடத்தின் மூலையில் இருந்து வெளியேவந்து கைகளைவிரித்து மழையில் நனைவான்.

றிமெம்பர் த டைம் பாடலில் மைக்கல் ஜாக்ஸன் செய்யும் மாஜிக்கள்தான் பல படங்களில் மாஜிக்காட்சிகளுக்கு ஆதாரங்களாக விளங்கியது.இப்படி மைக்கல் ஜாக்ஸனின் பாடல்கள் தனித்துவமானவை அக்காளப்பட்ட எம்.டிவியே மைக்கல் ஜாக்ஸனின் பாட்டுக்களைப்போட்டுத்தான் பிரபலமடைந்தது பாருங்கையா நானும் ஒருத்தன் ஒருக்கேன் என்று தன்னை  நிரூபித்துக்கொண்டது.ஜாக்ஸன் எவ்வளவு பிரபலமோ அந்த அளவிற்கு அவர் சர்ச்சையிலும் பிரபலம்தான் பாலியல்குற்றச்சாட்டுக்கள்,கடன்கள் போதைப்பொருள் என்று வாழ்க்கையின் இறுதி துன்பகரமாகவே முடிந்துபோனது.பாலியல் குற்றச்சாட்டுக்கள் இறுதியில் பொய்யானவையாக்கப்பட்டன.

மைக்கல் ஜாக்ஸன் என்ற கலைஞனை வியாபார உலகம் சுயனலத்துடன் சரியாகப்பயன்படுத்திக்கொண்டது.இறுதிகாலத்தில்  நிம்மதியான் உறக்கத்தையும் தொலைத்தார்.இதைவிட தனது இளமைக்காலத்தை இசைக்காக தொலைத்தார்.இதற்காக மைக்கல் ஏங்காத நாளே கிடையாது. மைக்கலின் தந்தை தனது மகன்கள் மிகச்சிறந்தவர்களாக வரவேண்டும் என்பதற்காக.தனது குழந்தைகளை மிகவும் கண்டிப்பாகவே நடத்தினார்.


 மைக்கேல் மற்றும் அவருடைய மூத்த சகோதரர்களின் இசைப் பயிற்சிக்காகவும், அவர்களது திறமை வெளியுலகத்துக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் மைக்கேலின் தந்தை ஜோசஃப் தன்னுடைய சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கிறார்.
ஏழு
பிள்ளைகளும் மனைவியும் சேர்ந்து மொத்தம் ஒன்பது பேருக்கு ஒரே ஒரு சிறிய அறையைக் கொண்ட வீட்டில் வாழ்ந்தபடி தன் பிள்ளைகளின் இசைப் பயிற்சிக்காகவும், பிறகு அவர்களைக் கொண்டு தான் அமைத்த ’ ஜாக்ஸன் 5 ’ இசைக் குழுவுக்காகவும் ஒருமுறை பெரும் அளவிலான இசைச் சாதனங்களை வாங்கி வருகிறார் ஜோசஃப்
.

நீ என்ன பைத்தியமா? ” என்று கேட்டு சண்டை பிடிக்கும் கேதரீனின் ஆட்சேபணைகளை அவர் பொருட்படுத்துவதே இல்லை. அவரைப் பொறுத்தவரை, தன் குழந்தைகளின் இசைக் குழு நாடெங்கும் பிரபலமாக வேண்டும். அவருடைய இந்தக் கனவு ‘ஜாக்ஸன் 5 ’ இசைக் குழு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே நிறைவேறி விடுகிறது. தாங்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் அனைத்திலும் பரிசுகளைக் குவிக்கிறார்கள் ஜோஸஃபின் குழந்தைகள். ஒன்பது வயதிலேயே மைக்கேலுக்கு ஒரு பிரபல பாடகனுக்குக்கு உரிய அந்தஸ்து கிடைத்து விடுகிறது. மைக்கேல் மேடையில் பாடும் போது இப்போது பார்வையாளர்களிடம் நாம் கண்ட அதே பித்துப் பிடித்த எதிர்வினையையே அப்போதும் பார்க்க முடிகிறது. இதற்கு மைக்கேலின் திறமை தவிர, ஜோஸஃபின் இடைவிடாத உழைப்பும், தன் குழந்தைகள் மீது அவர் வைத்த தீவிர நம்பிக்கையும்தான் காரணம். இதற்காக ஜோஸஃப் தன் மகன்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். நடனத்தில் ஒரு அடி பிசகினாலும் பெல்ட்டால் அடித்தார்.இப்படித்தான் மைக்கலின் தந்தை மைக்கலை நடத்தினார்.அவர் நினைத்த வெற்றியை மைக்கல் சிரமமின்றி பெற்றுவிட்டாலும் அதற்கு மைக்கல் கொடுத்தவிலை பெரியது தனது குழந்தைப்பருவம்.தந்தை மைக்கலை சாதாரண குழந்தைபோல் விளையாடக்கூட அனுமதிப்பதில்லை.இவைகள் தான் குழந்தைகள் மீதான நாட்டத்தை மைக்கலுக்கு அதிகரித்தன.

கலைக்காக தன்னையே உருக்கிக்கொண்டவர் ஜாக்ஸன்.இன்று எனிமம்,எகொன்,ஜெனிஃபெர் லோப்ஸ் என்று எவர் வந்தாலும்.மைக்கல் ஜாக்ஸனின் இடம் தனித்துவமானது.ரசிகர்களின் உயர்ந்த யாரும் எட்டமுடியாத அசைக்கமுடியாத இடம்.இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக ரசிகர்களை பித்துப்பிடிக்கவைக்கும் கலைஞனை உலகம் மீண்டும் சந்திப்பது மிகவும் கடினம்.

"பிறக்கும் முன்னே விழித்துக்கொண்டேன் அன்னையின் கருவில் புரண்டதும் நடனம் தொடங்கிவிட்டேன்" வைரமுத்துவின் இப்பாடல் வரிகள் மிகவும் பொருத்தமாவது மைக்கல் ஜாக்ஸனுக்குத்தான்.

அவ்வளவு ஏன் வேற்றுக்கிரக வாசிகள் பூமையைப்பற்றி எழுதும் முதல் பத்துவிடயங்களுள் மைக்கல் ஜாக்ஸனின் பெயரும் நிச்சயம் இருக்கும்.

ஜாக்ஸனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஜாக்ஸனின் மூன்வோல்க்தொடர்பாகவும் இப்பொழுது ஆராய்கிறார்கள்...


மைக்கேல் ஜாக்ஸனைப்பற்றிய சாருவின் பதிவு இங்கே கிளிக் மைந்தனின் மனதில்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்