படம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-01
[ரசிகர்கள் வேறு வெறியர்கள் வேறு இப்பதிவு வெறியர்களுக்குரியது]
தமிழனாய் வாழப்பெருமைப்படுவோம், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து
நில்லடா என்றெல்லாம் வாய் கிழியக்கத்தும் நாம் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான்
மூதாதையர் சாதித்த சாதனைப் பெருமைகளின் பின்னால் நம் கையாலாகாத தனத்தை
மறைத்து கொள்ளப்போகிறோமோ தெரியவில்லை.
இன்று தமிழரெல்லாம் ஆனா ஊனா என்றால் தமிழனும் சாதித்தவன் தான் என்று சில
நூற்றாண்டுக்கு முன்நடந்த சரித்திரச்சான்றுகளை எடுத்துக்காட்டுவது பிள்ளை பெறாத
மலடி தன் தாயும் முன்னோரும் பிள்ளை
பெற்றவர்கள் தான் என்று பெருமைப்படுவதுபோல்தான் இருக்கிறது.

முகப்புத்தக அலப்பறைகள்


தலைவன் ~ அண்ணன்
நம்மவர்கள் அடுத்து நடத்தும் கூத்து ரஜினி ,கமல்,விஜய் அஜித், போன்ற நடிகர்களை
தலைவர், அண்ணா என்றெல்லாம் கதைப்பதுடன் மட்டும் நின்று விடாது இருபத்து நான்கு
மணிநேரமும் இதே சிந்தனையுடன் அலைவது. நடிகர்களை எல்லாம் தலைவர்களாக
ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் ஒன்றும் கிழித்து விடவில்லை. எந்த ரீதியில்
அவர்களை தலைவர்களாக ஏற்று அவர்கள் கொள்கைகளை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். உங்கள்
காசை உங்களிடம் இருந்து உறிஞ்சி தாங்கள் உயர்ந்தார்களே அதற்காகவா...?, இல்லை
தங்கள் அரசியல் பிரவேசங்களுக்கும் சொந்த பிரச்சனைகளுக்கும் ரசிகர் மன்றங்களை
பயன்படுத்துகிறார்களே அதற்காகவா...?? [ரசிகர்களை என் சொந்த தேவைக்காக
பயன்படுத்தமாட்டேன் என ரசிகர் மன்றத்தை கலைத்தவர்களை பற்றி நான் இங்கு
கதைக்கவில்லை] உண்மை என்னவெனில் நடிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள் ஆனால் நாம் தான் படம் பார்ப்பது ஒரு மன அமைதிக்காகவும்
சந்தோசத்திற்காகவும்தான் என்பதை மறந்து படத்திற்கு வெறித்தனமாக அடிமையாய்
அலைகிறோம். அதை விடுங்கள் அது என்ன அண்ணன் சொந்த அண்ணன் தம்பி காட்டாத பாசத்தையல்லவா
அள்ளியள்ளி காடுகிறீர்கள் ..?? [அண்ணன் என்று அழைப்பதன் மூலம் உன் அப்பாவை
சந்தேகப்படச் சொல்லுகிறீர்களா.....??? இல்லை நடிகரின் அப்பாவை சந்தேகப்படச் சொல்லுகிறீர்களா....???]
இவர்களிடம் எல்லாம் உங்களுக்கு பிடித்த முதல் பத்து பேரை சொல்லுங்கள் என்றால் அதிலே குறிப்பாக முதல் ஐந்து இடங்களுக்குள்ளே ஒரு நடிகரின் பெயராவது கட்டாயம் இருக்கும். ஏன் உனக்காக உழைத்த அப்பா, அம்மா இல்லையா?? இல்லை கூடப்பிறந்த சகோதரங்கள் இல்லையா....??? அவ்வளவு ஏன் உன் முன்னேற்றத்தில் அக்கரை கொண்ட நண்பர்கள், ஆசிரியர்கள்....??? நீங்கள் ஒழுங்கான மனிதனாய் இருந்தால் உனக்கு பிடித்த முதல் பத்து பேரென்ன முதல் நூறு பேருமே உன்னை அறிந்த தெரிந்தவர்களாய் இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு உன் மீது எந்த வகையிலுமே அக்கறை இல்லாத உன்னை யாரென்றே தெரியாத ஒரு நடிகனை கூறுகிறாய் என்றால் நீ எவ்வளவு தூரம் அடிமட்டமான நிலையில் உன்னை சுற்றி எந்தொரு அன்பானவர்களும் இல்லாத நிலையில் இருக்கிறாய் என்பது நான் சொல்லி விளங்க வேண்டியதில்லை.
.........தொடரும்........
இதன் அடுத்த பதிப்பிற்கு இங்கே
கருத்துகள்
கருத்துரையிடுக