வெள்ளைமாளிகையின் கறுப்பு அடிமைகள்- ஒரு முழுத்தொகுப்பு


இன்று உலகின் அரசனாகவும் தேவைப்படுகையில் அரக்கனாகவும் திகழும் அமெரிக்காவின் அட்டகாசங்கள் சொல்லில் அடங்காது. தன் வளர்ச்சிக்காக ஏனைய நாடுகளை ஓட்ட உறிஞ்சிக் கொள்ளும் வழக்கத்தைதான் அது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து தன்னை தனி நாடக பிரகனடப்படுத்திக்கொண்டிருந்த நாட்களில் இருந்து கொண்டிருக்கிறது. அன்று முதல் ஒவ்வொரு அடியையையும் தூர நோக்குடன் முன்னெடுத்து வைத்து அதில் வெற்றியும் கண்டுகொண்டு இன்று வல்லரசாக உயர்ந்து நிற்கிறது.
                 ஆனால் உலக அரங்கில் இது கொண்டிருக்கும் இந்த நாட்டாமை நாற்காலி தனிய அமெரிக்கர்களின் உழைப்பினால் மட்டும் விளைந்தது அல்ல. அக்காலங்களில் செவ்விந்தியர்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்ட விளை நிலங்களில் ஆபிரிக்க அடிமைகளின் இரத்தத்தை விதைத்ததன் மூலம் ஏராளமான வருமானத்தை விவசாயத்தில் பெற்றுக்கொண்டது அமேரிக்கா. ஆனால் அமெரிக்கா தன்னை உயர்த்திக்கொள்வதற்காக செவ்விந்தியர்களை கொன்று ஆபிரிக்கர்களின் இரத்தத்தை அடியொட்ட உறிஞ்சிக்கொண்டது. அந்த வகையில் அமெரிக்காவில் கறுப்பு அடிமைகளுக்கு  நடைபெற்ற துன்பங்களையும் கொடுமைகளையும் அதிலிருந்து எப்படி அவர்கள் விடுபட்டார்கள் என்பதையும் வெங்காயத்தில் ஒரு தொடர் கட்டுரையாக வரைதிருந்தோம். அதன்படி அத்தொடர் முடிவடைந்த நிலையில்  அப்பதிவுகளின் ஒருங்கமைந்த தொகுப்பு பதிவாக இப்பதிவு அமைகிறது.

வெள்ளைமாளிகையின் கறுப்பு அடிமைகள்-01
அமெரிக்காவிற்கான கருப்பு அடிமைகள் எவ்வாறு அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டார்கள் என்றும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட விலைகள் எத்தகையது என்றும் அடிமைகளுக்கான சட்ட முறைகள் பற்றியும் இப்பதிவு கூறியிருந்தேன்.
   
          "..................உண்மை அமெரிக்கர்களான செவ்விந்தியர்களிடமிருந்து பறித்துக்கொண்ட வளமிக்க நிலங்கள் ஏராளம் இருந்த போதும் அதை உரிய பராமரிப்பின் மூலம் பயன்படுத்த போதிய உழைபாளிகள் இல்லாதிருந்தது. வட அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஏராளம் பருத்தி விளையும் நிலங்கள் பயனற்று போவதை பிரபுக்கள் யாரும் விரும்பியிருக்கவில்லை. மேலும் தங்களுக்கு ஏற்படும் இலாபத்தில் உழைபாளிகளுக்கு சம்பளம் கொடுப்பதையும் அவர்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் சம்பளம் இல்லாத நல்ல உழைபாளிகள்தான். இதற்க்கு அவர்கள் எடுத்த முடிவுதான் ஆபிரிக்க நாடுகளில் வறுமையில் வாடும் கறுப்பின உழைப்பாளிகளை அடிமைகளாக ஒரே கூலியில் விலை கொடுத்து வாங்குவது..........."
                   


வெள்ளை மாளிகையின் கறுப்பு அடிமைகள்-02

அடிமைகளுக்கு விதிக்கப்பட்ட வேலைகளும் அதனால் அவர்கள் எவ்வாறு பாகுபடுத்தப்பட்டனர் என்பது பற்றியும் அவர்களின் வேலைநேரம் குறித்தும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்தும் இப்பதிவில் கூறியிருந்தேன்.
  
            "...........வீட்டு வேலை பார்ப்பவர்களை பொருத்தவரை எஜமானர்களின் கட்டளைக்கு கீழ் படிந்து தரும் வேலைகளை செய்ய வேண்டியதுடன் பண்ணை வீடு முழுவதையும் ஒருநாளில் எட்டுமுறை கூட்டியள்ளுவதுதான் இவர்களின் மிகப்பெரும் வேலையாக அமைந்தது. ஒரு பண்ணை வீடு சாதாரண சுற்றுப்பரப்புகளை கொண்டதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவர்களுக்கு பொறியும், கொள்ளும் தான் நாளுக்கு இருமுறை இருபிடி உணவாகத்தரப்படும்.........."
                       


வெள்ளை மாளிகையின் கறுப்பு அடிமைகள்-03

இன்று மனிதநேயனாக வெளிப்படுத்திக்கொள்ளும் அமெரிக்கா அன்று கருப்பு அடிமைகளுக்கு இளைத்த கொடிய துன்பங்கள் எத்தகையது எவ்வளவு கொடூரமானது என்பது பற்றி இப்பதிவில் கூறியிருந்தேன்.

              “...............இது என்ன பிரமாதம் பிரசவவலி எடுத்த ஒரு பெண் அடிமை வலியில் துடித்துக்கொண்டிருந்த சமயம் அவளை படுக்கைக்கு இழுத்து பலாத்காரப்படுத்தி புனர்ந்ததின் மூலம் அவ்வடிமையையும் குழந்தையையும் ஒரே சமயத்தில் கொன்று ஆற்றில் வீசியெறிந்த பண்ணையார் ஒருவர் கூட அங்கு பெருமையுடன் தான் தொடர்ந்து வசித்து வந்திருக்கிறார். இதெல்லாவற்றையும் விட தமக்கு வேறேதாவது கோபம் எண்டால் அடிமைகளை வரிசையில் நிக்க வைத்து குருவியை சுடுவது போல் சுட்டு புதைத்த தனவான்கள் வசித்த அமேரிக்கா அது. இரவில் குழந்தையை பார்க்க நியமிக்கப்பட்டிருந்த 14 வயது அடிமைப்பெண் ஒருத்தி வேலைமிகுதியால் அசந்து தூங்கி விட்டால் என்பதற்காக சவளால் அவள் மண்டையை பிளந்து மூளையை பார்த்த தாய்குலம் கூட அப்போதைய அமெரிக்காவில் இருந்திருக்கின்றனர்........”
      

வெள்ளை மாளிகையின் கறுப்பு அடிமைகள்-04

தொடர்ந்து அடிமை முறையை பொறுக்கமுடியாது எவ்வாறு அடிமைகள் துவண்டு எழுந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்பிய காரிஸன் பற்றியும் அபாலிஷனிஸ்ட் {ABOLITIONISTS}  பற்றியும்  பிரடரிக் டக்ளஸ் பற்றியும் அடிமைகளுக்கு ஆதரவான குரல்கள் பற்றியும் இப்பதிவில் கூறியிருந்தேன்.
                  “..............இதனால் தான் கிபி 1820 ஆம் ஆண்டு நியூ இங்கிலாந்துக்காரரான பத்திரிகை ஆசிரியர் வில்லியம் லாயிட் காரிஸன் அடிமை முறையை ஒழிப்போம்என குரல் கொடுத்த போது அவரின் பின்னால் ஒரு மக்கள் கூட்டம் அணிதிரண்டது. அடிமை முறையை எதிர்த்து தெளிவான எதிர்க்குரலை கிளப்பிய முதல் மனிதர் காரிஸன் தான். ஆனால் இதை விரும்பாத அடிமை விரும்பிகள் காரிஸனுக்கும் அவர் பின்னால் அணிதிரண்ட மக்களுக்கும் அபாலிஷனிஸ்ட் {ABOLITIONISTS} எனும் பட்டத்தை கட்டி விட்டார்கள் என்பதுடன் இவர்களுக்கு எதிராக கிளம்பிய குரல்களும் அடக்குமுறைகளும் ஏராளம்..............”
                         


போராட்டமில்லாமல் விடுதலை இல்லை

தமக்கு ஆதரவான குரல்கள் கிளம்பியதும் அடிமைகளின் கோபம் எவ்வாறு வெளிப்பட்டது என்பது பற்றியும் அதற்காக அவர்கள் செய்த போராட்டங்கள் பற்றியும் இப்பதிவில் கூறியிருந்தேன்.
    
                  “...........எங்கள் வலியை நீங்கள் அனுதாபத்துடன் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சொந்தமாக அனுபவிக்காத உணர்வுகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்...........என்பதே தப்பி வந்த அடிமைகளின் வாதமாக இருந்தது. ஆம் எந்த ஒரு இனத்தினதும் கொடுமைகளையும் வேதனைகளையும் சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாதவர்களே அவ்வினத்தாரின் போராட்டங்களுக்கும் விடுதலைக்கும் எதிராக இருக்கின்றனர். ஆம் போராட்டமில்லாமல் விடுதலை இல்லைதான்...........”.  
   
                                     [மேலதிக விபரங்களுக்கு இங்கே]  

அமெரிக்க உள்நாட்டு யுத்தமும் அடிமைகள் பிரச்சனையும்


அமெரிக்க அடிமைகளின் பிரச்சனையால் அமெரிக்காவில் விளைந்த உள்நாட்டு யுத்தம் பற்றியும் அதில் அடிமைகளின் பிரச்சனை செலுத்திய செல்வாக்கையும், எவ்வாறு யுத்தம் முடிவுக்கு வந்தது என்பது பற்றியும் அடிமைகள் பிரச்சனை முடிவுற்றது எவ்வாறு என்பது பற்றியும் இப்பதிவில் கூறியிருந்தேன்.

                     “........வேறுவழியே இல்லை தேசத்தை ஒன்றாக்க வேண்டுமென்றால் தமக்கு எதிராக தாமே போரிட்டுத்தான் ஆகவேண்டும். பிளவுபட்ட ஐக்கிய அமெரிக்காவை மீளக்கட்டமைக்க வேண்டுமென்றால் போர் அவசியம் என எல்லோருக்குமே பரவலாக விளங்கியிருந்தது. ஆனால் இந்த உள்நாட்டுப்போரில் பிற நாடுகள் தலையிட்டு விட்டால் அமெரிக்கா இரண்டாகிவிடும் என்பதும் வெளிப்படை உண்மையாக இருந்தது. நல்ல விதமாக தென்னமெரிக்கா பிற நாடுகளின் ஆதரவை எதிர்பார்த்திருந்த போதும் வட அமெரிக்காவின் நியாயத்தன்மை கருதி பிற நாடுகள் இங்கு தம் தலையீட்டை தவிர்த்துக்கொண்டன. அன்று மட்டும் பிற நாடுகள் இப்போரில் தலையிட்டு இருந்தால் இன்று ஐக்கிய அமெரிக்கா எனும் தேசமே எம்முன் இருந்திருக்காது..................”

                       

                                                 [மேலதிக விபரங்களுக்கு இங்கே]  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்