நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-எதிர்ப்பு-சிலம் டோக் மில்லியனர்

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி அடுத்த சீசனுக்கு பிரகாஸ்ராஜ் தெரிவுசெய்யப்பட்டு அதற்கான விளம்பரம் இடையிடையில் விஜய் டி.வியில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

படிச்ச படிப்பு என்னைக்குமே காப்பாத்தும்...





முதல் சீசனில் சூர்யா  கலக்கிசென்றிருந்தார். நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் சூரியா கண்கலங்கி  சிலபல வார்த்தைகள் பேசி அனைவருக்கும் நன்றிகூறி விடைபெற்றுசென்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அந்த இறுதி எபிசோட்...



ஆரம்பத்தில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி அதிகவரவேற்பைப்பெற்றாலும்.பின்னர் போக போக ஒரே பாணியிலான கேள்விகளால் பலர் சலிப்படைந்தார்கள் சோ..சாதாரணமான மக்கள் நிகழ்ச்சியில் பங்குபற்றுவது இடையில் நின்று கோபினாத்,சிவகார்த்தி,போன்ற விஜய் ஸ்ரார்களும்,ஸ்ருதி கார்த்தி,சிவகுமார்,சுஹாசினி,ஜெயம் ரவி,சத்தியராஜ் போன்றவர்களும் நிகழ்ச்சியில் பங்குபற்றி டி.ஆர்.பியை ஓரளவு தாக்குப்பிடித்தார்கள்.

கோபினாத்,சிவார்த்தி இருவரும்வந்ததுடன் மட்டுமல்லாது தமது சோகவரலாறுகளைச்சொல்லி கண்ணீர்சிந்திச்சென்றார்கள்..

சிவகார்த்தி  கண்ணீர் சிந்தியது...


கோபிநாத்...



நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொடர்பில் மாற்றுப்பார்வைகள் பலவும் பதிவர்களால் முன்வைக்கப்பட்டன.மிமிக்ரி ஆர்டிஸ்டான சீனிப்பிரபு நீங்களும் வெல்லாம் ஒரு கோடி எவ்வாறு மக்களிடம் கொள்ளையடிக்கின்றது என்று தனது ஸ்ரைலில் ஒரு வீடியோவைவெளியிட்டிருந்தார்



இன் நிகழ்ச்சிமீது வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு கோல் வெயிட்டிங்க்,எஸ்.எம்.எஸ் மூலமாக விஜய் டி.வி மக்களிடம் கொள்ளை அடிக்கின்றது என்பதுதான்.திறமைக்கு பரிசுதர விரும்பினால் பிரீகோல் வசதியை செய்திருக்கலாமே என்று பலர் கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள்.

இணையத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அந்த எஸ்.எம்.எஸ் மேட்டர்

//நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் “கொள்ளை லாபம்.’
இதேபோல்தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பதிவு செய்ய குறைந்த பட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம்.
இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.
இதேபோலத்தான் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தங்களை தேர்ந்தெடுக்க எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டுப் போடுங்க என்று கூறுகின்றனர். இதெல்லாம் நம் பணம் நம்மையறியாமலேயே கையை விட்டுப்போகிறது.(kalapam)//

திடீர் என்று இன்று விஜய்  டி.வியில் சிலம் டோக் மில்லியனர் பார்க்கமுடிந்தது. இசைக்கு ரகுமானுக்கு ஒஸ்காரை வாங்கிக்கொடுத்த படம்  ஆகையால் பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று எத்தனையோ தடவை யோசித்தும் ஒரு தடவைகூட பார்க்கமுடியாமல் போனது சோகமே விஜயில் வேரு 2,3 தடவைகளுக்குமேல் போட்டுவிட்டார்கள் இன்றுதான் பார்க்கமுடிந்தது.

படம் என்னை வெகுவாகக்கவர்ந்துவிட்டது.

இப்படம் இந்திய எழுத்தாளரான Vikas Swarup இன் கியூ அண்ட் ஏ நாவலைத்தழுவி எடுக்கப்பட்டது.
Vikas Swarup

சேரிப்புறத்து சிறுவர்களில் ஆரம்பிக்கின்றது கதை...

அமிதாப்பச்சனைப்பார்ப்பதற்காக மலக்குழிக்குள் விழுந்து எழுந்து சென்று அவரின் ஓட்டோக்கிராப் வாங்க முயலும் சிறுவன் ஆனால் அவர் ஓட்டோக்கிராபை வைத்து அனுப்புகின்றார்.
கலவரத்தில் இறக்கும் தாய்..
நெக்கட்டிவ் காரக்ரரான அண்ணன் சலீம்..
சிறியவயதில் ஒட்டி அவர்களுடனேயே வளர்ந்த காதல்..
பம்பாய் கலவரத்தில் இறக்கும் ஜமாலின் தாய்..
அதிலும் முக்கியமாக ஒரு சீன் வரும் ஜமாலும் அவனின் அண்ணனும் தப்பி ஓடிக்கொண்டிருக்கும்போது இடையே ஒரு சிறுவன் ராமன் வேடத்தில்  வந்து நிற்பான்(அவனும் ஓடிக்கொண்டிருந்தவன்தான்)5 செக்கண்ட் உறைந்துபோய்ப்பார்த்துவிட்டு ஜமாலும் அண்ணனும் மீண்டும் ஓடுவார்கள்  கருத்துள்ள அசத்தலான சீன் அது அதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஸ்.



இதற்கும்  வழக்கம்போல் எதிர்ப்புக்களை கிளப்பிவிட்டார்கள் மதவாதிகள் இதில் ராமர் இடதுகையை தூக்கிக்காட்டுகிறார் உண்மையில் ராமர் வழமையாக வலதுகையைத்தான் காட்டுவார்.சோ பிரச்சனையை ஆரம்பித்தார்கள்.பாவம் இயக்குனர் கூறவந்தவிடயம் முழுமையாக விளிங்கியிருந்தால் கலவரம்தான்.

(mpact of denigration and the need to combat denigration
A. Denigration can shatter faith of individuals and set unwanted examples for future generations.
B. Create a doubt about the credibility of the Divine and / or its symbol. Finally, it can even cause exclusion of religious practices, and facilitate destruction of religion.
One can understand denigration of individuals; it can show an individual in a light, which tarnishes his reputation. Commenting on a Politician’s / public figure’s misdeeds or sketching their cartoons, are two such examples.
At the level of individuals, such caricatures, cartoons, creations or lampooning are the lightest forms of denigration – and subject to differences in personal opinions.
Whereas denigrating the Divine, questions the very relationship humans have with the Divine. It questions the faith of a human in Divinity and Its powers. It erodes values – moral, social and spiritual.
Thus, the urgent need to strongly oppose and stop denigration through any medium, of Deities and Divine symbols.)
இதுவரை பல படங்களில் தாஜ்மஹால் என்பது காதலின் சின்னமாக மிக அழகான வியூவில் மட்டுமே காட்டப்பட்டது.ஆனால் இந்தப்படத்தில் தாஜ்மகாலை காட்டும்போது அதற்குமுன்னே கூவம்போன்ற ஒரு கழிவுச்சாக்கடையைத்தாண்டித்தான் தாஜ்மஹாலைப்பார்க்கமுடிந்தது. வருடம் முழுவதும் அங்கே வெளி நாட்டுப்பயணிகள் வந்து குவிவார்கள் இந்தியாவின்  பெருமைகூறும் முக்கியமான அடையாளங்களில்  ஒன்று ஆனால் அதன் அருகிலேயே அந்த சேரிவாழ்க்கை.

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் சேரிச்சிறுவனான ஜமால் மாலிக் கலந்துகொள்கின்றான்.நிகழ்ச்சி நடத்துபவரான அனில்கபூர் ஜமால் டீ ஊற்றிக்கொடுக்கும் அஸிஸ்ரென்ற்,சேரி சிறுவன் என்பதற்காக பல இடங்களில்  வெளிப்படையாக ஜமாலை வாரிவிடுகின்றார்.அதிலும் ஒரு கேள்விக்கான பதிலை அனில்கபூர்  ரொய்லெட்டுக்குள்வைத்து  ஜமாலிடம் கூறிவிடுகின்றார்.திக் திக் என்று ஆகிவிட்டது அந்தக்காட்சி.

பல இடங்களில் சலீமின் வில்லத்தனம் கோபத்தை ஏற்படுத்தியது.இறுதியில் சலீம் நம்மைவிட்டு விலகும் காட்சியிலும் தனது காரக்ரரை செம்மையாக பதித்துவிட்டே செல்கின்றார்.

நிகழ்ச்சியின் இறுதிப்பகுதிக்குமுன்னர் வெளியில் வந்த ஜமாலை பொலீஸ் பிடித்துசென்று போடு போடென்று போடுகின்றது.சேரிப்புறத்து சிறுவன் நீ எப்படி இவளவு பணத்தை ஜெயித்தாய்?ஏதாவது மைக்குரோ சிப் வைத்திருக்கின்றாயா? என்று பல கேள்விகளுடன் வெளுத்துவாங்குகின்றார்கள். அப்படியே அங்கிருந்து இடையிடையே பிளாஸ்பக் சொல்லும் விதம் அருமை.

பல கேள்விகளுக்கு ஜமாலுக்கு பதில் தெரிந்திருந்தது என்பதை விட..ஜமாலுக்கு சந்தர்ப்பவசத்தால் தெரிந்த பதில்களையே துரதிஸ்ரவசமாக அனில்கபூர் கேட்டார் என்றும் கூறலாம்...அதை அதிஸ்ரம் என்று சந்தோஸப்பட்டுக்கொண்டாலும் ஓகேதான்.

படத்தில் பல இடங்களில் இரசிக்கக்கூடிய பல கட்டங்கள் திருப்பங்கள் நிறையவே இருக்கின்றன.இப்படியான ஒரு படத்தை இவளவுகாலம் தாழ்த்திப்பார்த்தது கவலைதான்.ஒருவேளை இதுவரை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்காத என்னைப்போன்ற துரதிஸ்ரசாலிகள் இருந்தால் பார்த்துவிடுங்கள்..

ஒரு சேரியில் வாழும் சிறுவன் கோடீஸ்வரன் ஆகினால் என்ற கற்பனைக்கதை இது ஆனால் உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

//மிகவும் ஏழ்மையான நிலையில் சேரி வாழ்க்கை வாழ்ந்து வந்த சுஷில் குமாருக்கு அவரது வீட்டில் சொந்தமாகத் தொலைக்காட்சிப் பெட்டி கூட இல்லையாம். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஒளிபரப்பாளர் அமிதாப் பச்சன், சுஷில் குமாரை வெற்றியாளராக அறிவித்தார்., அவரையும், அவரது மனைவியையும் அழைத்து, ரூ 50 மில்லியன் (ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல்) பரிசுத்தொகையை நேரடியாக வழங்கி அவர்களைப் பரவசப்படுத்தினார். நீங்கள் புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களது அர்ப்பணிப்பும், ஆர்வமும், இதுவரை உங்களை இந்நிகழ்ச்சியில் கொண்டு வந்துள்ளது என அமிதாப் பச்சன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் குமார் பங்குபெற்ற முன்னர், அவரது மாதச் சம்பளம் டாலர் மதிப்பில் 120 அமெரிக்க டாலர்களே! பீஹார் மாநிலத்தின் மொதிஹாரியில் சின்னதாக ஒரு தனியார் வகுப்பு நடத்தி வருவதால் கொஞ்சம் மேலதிக வருமானம் வந்துள்ளது. மற்றும் படி அரசு உத்தியோகம் தான்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கு பற்றுவதைக்கூட அவரது குடும்பத்தினர் பக்கத்துவீட்டு டீவியில் தான் பார்த்திருக்கிறார்கள். நிகழ்ச்சியின் முதல் சுற்றுக்களில் அவர் சரியான பதில்களை டிக் செய்யச் செய்ய அவரைக் கிடைத்த பணத்துடன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேரிவிடுமாறு நெருங்கியவர்களால் வற்புறுத்தப்பட்டிருக்கிறார்.

இந்தப் பணத்தை வைத்து என்னென்ன செய்வதற்கு அவர் திட்டமிட்டிருக்கிறீர்கள் என நிருபர்கள் கேட்ட போது, இந்திய சிவில் சேர்விஸ் பரீட்சை எழுத வேண்டும். அதற்கான பயிற்சிகளுக்காக சில பணம் செலவிடுவேன். இப்பரீட்சை மூலம், மிக பாதுகாப்பானதும், பெறுமதியானதுமான நிரந்தர தொழிலொன்று எனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றார்.

மனைவிக்காகப் புதிய வீடு ஒன்று வாங்குவேன். பெற்றோருக்குத் தேவையான பணம் வழங்குவேன். சகோதரர் சிறிய வர்த்தகமொன்றை தொடங்கிட மூலதனமாகக் கொஞ்சம் பணம் வழங்குவேன் என தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக பேசத்தொடங்கிய குமார், தனது சொந்த ஊரான மோதிஹாரியில், ஒரு நூலகம் கட்டப்போவதாகவும் இதன் மூலம் அந்த ஊரில் உள்ள சிறார்கள் தங்கள் கல்வி அறிவைப் பெருக்கி கொள்ளலாம் எனவும் இறுதியாக தெரிவித்தார்//

குவித்த விருதுகள்...


அகாதமி விருது - 2009
சிறந்த படம்
சிறந்த இயக்குனர் – டானி பொயில்
சிறந்த இசையமைப்பு – ஏ. ஆர். ரகுமான்
சிறந்த மூலப் பாடல் – "ஜெய் ஹோ", (ஏ. ஆர். ரகுமான் (இசை) & குல்சார் (பாடல்)
சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை– சைமன் பியூஃபோய்
சிறந்த ஒளிப்பதிவு – ஆந்தனி டொட் மாண்டில்
சிறந்த படத்தொகுப்பு – கிறிஸ் டிக்கன்ஸ்
சிறந்த ஒலிக்கலப்பு – ரெசுல் பூக்குட்டி, ரிச்சார்ட் பிரைக், இயன் டாப்
பரிந்துரைப்பு: சிறந்த ஒலித்தொகுப்பு – டொம் சயேர்ஸ்
பரிந்துரைப்பு: சிறந்த மூலப் பாடல் – "ஓ..சாயா", ஏ. ஆர். ரகுமான், எம். ஐ. ஏ (பாடல்)
[தொகு]கோல்டன் குளோப் விருது - 2009
சிறந்த திரைப்படம்
சிறந்த தயாரிப்பாளர் (டானி பொயில்)
சிறந்த திரைக்கதை (சைமன் பியூஃபோய்)
சிறந்த இசையமைப்பாளர் (ஏ. ஆர். ரகுமான்)

ரகுமானின் ஒஸ்கார் புயலில் நான் கவனிக்காதுவிட்ட ஒரு விடயமும் இருக்கின்றது..இப்படத்திற்கு மும்பாய் சேரிகளில் வாழும் மக்கள் எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்...இப்படம் எங்களை அவமானப்படுத்திவிட்டதாக எதிர்ப்பிக்கோஸங்களை எழுப்பியிருக்கின்றார்கள்.

("They have made a mockery of us, they have hurt our sentiments," said N.R. Paul, a protest leader and resident in Dharavi, Asia's largest slum.

The protesters, who were forced by policemen to assemble a few hundred meters from Dharavi, shouted "Down, down Danny Boyle" and "Down, down Censor Board."

"Slum dwellers are human beings, not dogs," said one poster.

Protesters also slapped pictures of Boyle and the film's actors with slippers, saying their depiction of poverty was demeaning to millions.

"They should change at least the title. Why did our Censor Board allow such a title in India? It is very sad," said Kallubhai Qureshi, a resident in Dharavi.

Nicholas Almeida, a social activist and slum dweller who has filed a complaint in a local court against the title, said the filmmakers also had a responsibility toward the slums in which they shot the movie.

"It is making so many millions of dollars, why can't they spend some money here to improve our lives?" said Almeida.)
இந்தியாவின் இந்த அவலத்தை விற்றா ஒஸ்கார் வாங்கவேண்டுமென்ற கேள்விகள்  ஒரு வகையில் நியாயமானதுதான்..சிலம் டோக்... நாங்கள் நாய்களல்ல இந்தியாவின் எதிர்காலம்.




இது கூட ஒரு பேசும் புகைப்படம்தான்..


சில கார்ட்டூன்கள்..




நீங்களும் வெல்லாம் ஒரு கோடியின் அடுத்த சீசனுக்கு விஜய் டி.வியின் புத்திசாலித்தனமான விளம்பரம்தான் இன்றைய சிலம் டோக் மில்லியனர்...



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்