திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இஸ்லாமியராக மாறியதால் பதவி விலகினாரா?




எனது அருமை கிறிஸ்த்துவ சகோதரர்களே.

உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். உலகிலுள்ள 120 கோடி ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்தக் கூடிய போப் ஆண்டவர் பதினாறாம் பெனடிக்ட் சில நாட்களுக்கு முன்னாள் தனது வயதை காரணம் காட்டி போப் ஆண்டவர் பதவியை ராஜினாமா செய்தார். 

இவரது பதவி விலகலின் உண்மை காரணம் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

இவர் சில வருடங்களாக இஸ்லாமிய புத்தகங்களை படித்தும் குரானை ஆராய்ந்தும் வந்தார் அதன் தாக்கம் தான் தற்பொழுது அவர் போப் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

அவர் தற்பொழுது இஸ்லாமியராக உள்ளதாகவும். அதை பற்றி பகிரங்கமாக அறிவிக்க முடியாமலும் அறிவித்தால் ஆபத்து வரும் என்று கருதுவதாக வும். அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கிறார்களாம். அல்ஹம்துலில்லாஹ்.

இதை பற்றி மக்களுக்கு தெரிந்தால் சாரை சாரையாக இஸ்லாத்திற்கு மக்கள் வருவதை தடுக்கு இயலாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

கிறிஸ்த்துவ மக்களே சிந்தியுங்கள். நீங்கள் எந்த அளவிற்கு உண்மையான கிறிஸ்துவராக இருபிர்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் இந்த போப் ஆண்டவர் பதவி வகித்தவர் எப்படி என்று நாம் அனைவருக்கும் நன்றாக தெரியும் அவரே தற்பொழுது குரானை ஆராய்ந்து பார்த்து இஸ்லாத்தின் பால் தனது பார்வையை திருப்பி உள்ளார். 

உங்கள் அனைவரையும் இஸ்லாத்தின் பால் அழைக்கிறோம் வாருங்கள் இணைவோம் ஓரிறை கொள்கையில். 

இஸ்லாத்திற்கு வரவும். இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளவும். இலவச குரான் தேவை படுபவர்களும் தயவு செய்து எனக்கு மெசேஜ் செய்யுங்கள். உங்களுடன் பேச ஆவலாக உள்ளேன்.

பைபிள் இறைவேதமா? என்ற பேஸ்புக் பான் பேஜ் ஒன்றிருக்கின்றது பைபிளைக்கழிவிக் கழுவி ஊற்றுவது இந்தப்பேஜின் தலையாய பணிகளுள் ஒன்று

இந்தப்பேஜின் கொடுமையான விடயம் என்னவெனில் பைபிளில்  இருக்கும் விஞ்ஞான விளக்கம் என்று ஒரு விளக்கத்தை கிறீஸ்தவர்கள் வெளியிட அது அறிவியல் ரீதியில் முற்றிலும் பொருத்தமற்ற முட்டாள்தனம் என்று வாதிடுகின்றது இந்தப்பேஜ்....

ஆனால் குர்ரானில் கூறியவை மட்டும் விஞ்ஞான ஆரய்ச்சிக்குட்படுத்தமுடியாது,உட்படுத்தக்கூடாது காரணம் அது புனித நூல் கூறியது கூறியதுதான்... என்ன கொடுமை சரவணா?
குர்ரானில் கூறியதை நான்கள் பிழைகூறவில்லை அதில் கூறியதென்று நீங்களாக ஒரு கதைகட்டிவிடுவதைத்தான் பிழை என்கிறார்கள்...ஏதோ கொஞ்சமாவது சயன்ஸ் படித்தோர்....

பைபிளைப்பற்றிய இந்தப்பெஜின் கேள்விகள்..(பல கேள்விகள் கருத்து யுத்தங்கள் நடைபெறுகின்றன... மாற்ருக்கருத்தை நீங்கள் முன்வைப்பீர்களாக இருந்தால் நீங்கள் தடை செய்யப்படுவீரகள்(கருத்து சுதந்திரமாம்)

//12 , 13 ஆகிய வசனங்களில் தேவன் எதற்காக வானவில்லை உண்டாக்கினார் என்ற ஒரு மாபெரும் அறிவியல் தத்துவத்தை பைபிள் சொல்கிறது. வானவில்லை நான் எதற்கு வைத்தேன் தெரியுமா ? இனி உங்களை ஜலப்பிரளயத்தில் கொல்ல மாட்டேன் என்று நான் உங்களிடம் உடன்படிக்கை செய்துள்ளேனே ? அதற்கு அடையாளமாக வானவில் இருக்கும். இந்த உடன்படிக்கை எனக்கு மறந்து போக கூடாதுன்னு இந்த வானவில்லை வைத்து நான் நினைவு கூர்ந்து கொள்வேன் என்று கர்த்தர் சொல்கிறார்.வானவில்லை வைத்துதான் கர்த்தர் நினைவு கூற வேண்டுமா ? கர்த்தருக்கு நினைவாற்றல் அவ்வளவு மந்தமா ? வானவில் இல்லை என்றால் கர்த்தர் ஜலப்பிரளயத்தை மறந்து விடுவாரா? என்பன போன்ற கேள்விகளை கூட ஒதுக்கி வைத்து விடலாம்.இங்கே நாம் சொல்ல வருவது என்னவென்றால் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலபிரளயதிர்க்கு பின்புதான் வானவில்லை கர்த்தர் வானத்தில் வைத்தாராம் !!!!வானவில் எதனால் உண்டாகிறது ? "Principle Of Dispersion Of Light " என்று பள்ளிகளில் நாம் 8 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்புக்களில் படித்திருப்போம். அந்த அளவிற்கு கூட கர்த்தரின் அறிவு வளரவில்லை என்பதற்கு [ஆதியாகமம் 9 :13] சாட்சி.

இந்த "Principle Of Dispersion Of Light " என்றால் என்ன ? வெள்ளை ஒளி ஒரு முப்பட்டகம் (Prism ) வழியாகவோ அல்லது ஒரு அலைவளைவுக் கீற்றணி (Differential Grating) வழியாகவோ சென்றால் தன்னுள் ஐக்கியமாகி இருக்கும் பல நிறங்களாக (அலைநீளங்களாக Wavelenghths) பிரியும். வானவில் எதனால் வானத்தில் உண்டாகிறது என்றால் மழை துளிகளோ, அல்லது மிக சிறிய பனி துளிகளோ பூமியில் விழும் போது சூரியனின் வெள்ளை ஒளி அதில் படும். அப்போது ஒவ்வொரு நீர்த்துளியும் ஒரு முப்பட்டகம் போல் செயல்படும். எல்லா முப்பட்டகங்களிலும் உள்ளுக்குள் ஏற்படுகின்ற Refraction - Reflection -Refraction இந்த நீர்துளிகளிலும் ஏற்படும். அதனால் பல அலைநீலங்களாக வெள்ளை ஒளி பிரிந்து வானவில்லாக நமக்கு காட்சியளிக்கும். வானவில்லின் உள்ளுள்ள பகுதியில் Scattering Of Light (ஒளி சிதைவு) அதிக அளவில் இருக்கும். 

இது நோவாவின் காலத்தில்தான் முதன்முதலில் நடந்ததா ? நோவாவின் காலத்திற்கு முன்னரே சூரியன் இருந்தது. மழையும் பொழிந்தது. அப்போவெல்லாம் வெள்ளை ஒளி பிரியவில்லையா ? அப்படி பிரியவில்லை என்றால் நோவாவின் காலத்தில் கடல் ஊதா நிறத்தில் இருந்திருக்காது, வானம் ஊதா நிறத்தில் நோவாவிற்கு தெரிந்திருக்காது, இலைகள் பச்சை நிறத்தில் தெரிந்திருக்காது, நோவாவும் மனிதன் இருக்கும் நிறத்தில் இருந்திருக்க மாட்டார். பூமியில் எல்லாமுமே வெள்ளை வெள்ளையாகத்தான் இருந்திருக்கும் !!!!!ஆக [ஆதியாகமம் 9 :13] த்தில் பைபிள் சொல்வது அறிவுக்கு பொருந்தாத ஒரு விஷயம் என்று தெளிவாகிறது. கர்த்தர் கொடுத்த வார்த்தையாக இருந்திருந்தால் இந்த முரண்பாடு வந்திருக்காது. //

குர்ரான்

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்……….. குரான் 13:2; 31:10.
“சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது” குரான் 36:38 

ஆகவே பிரபஞ்சம் விரிவடைகின்றது என்பதை குர்ரான் அப்போதே தெரிவித்துள்ளது( எது சார்பாக விரிவடைகின்றது அதுசரி பிரபஞ்சம் விரிவடையுது என்றால் அதை எப்படி நம்புவது என்று மதவாதிகள் கேட்பார்கள் டொப்லர் இபக்டைவைத்து விளக்கியதும் உடனே கூறுவார்கள் இதைத்தான் குர்ரானும் அப்போதே கூறிவிட்டது ஆனால் அப்படி ஒரு விடயம் இருக்கின்றது என்பதையே இவர்களுக்கு அறிவித்தது விஞ்ஞானமாகத்தான் இருக்கும்,விஞ்ஞான விளக்கங்களை தமது சமயத்திற்குள் புகுத்திக்கொள்ளல்தான் இப்போதைய புதிய ரெண்ட்...இந்து சமயத்தில் ஆரம்பகால மக்களை கவருவதற்கு நாயன்மார்கள் அதிசயம் செய்வார்கள்,செங்கட்டியைப்பொன்கட்டியாக்குவார்கள் கல் எல்லாம்மிதக்கும் இந்து சமய உண்மைகளை ஆற்றில் இட்டால் எதிர் நீச்சலடித்து கரைக்குவந்து சேரும்(சம்பந்தர் சமணர்களுடனான அனல்வாதம் புனல் வாதத்தில் இவைகளை செய்தார் என்கிறது புராணங்கள் அப்போதைய மக்களின் அறியாமையைப்பயன்படுத்தி சமயத்தை வளர்க்கும்விதத்தில் அமைக்கப்பட்ட இவ்வாறான அதிசயங்கள் ஆச்சரியங்கள் அக்கால மக்களுக்கு ஓகே ஆனால் இப்போது யாராவது நம்புவார்களா என்றால் பதில் இல்லை என்பதுதான் ஆகவே இப்போதைய முட்டாள்தனத்தைப்பயன்படுத்தவேண்டும்.இப்போதைய முட்டாள்தனம் என்ன...சயன்ஸ்பற்றிய மிகக்குறைந்த அறிவுதான் இப்போதையமுட்டாள்தனம் ஒருவிடயத்தைப்பற்றிய குறைந்தபட்ச அறிவைப்பெற்றிருத்தல் என்பது அவ்விடயத்தைப்பற்றி தெரியாமல் இருப்பதை விட ஆபத்தானது இதே போர்முலாவை சமயத்தில் பயன்படுத்துகின்றார்கள்,,பிக் பாங்க்,அணுகுண்டு,அணு,பிக் போஸன் போன்ற வசனங்களை விடயங்களை மக்கள் கேட்டிருக்கிறார்களே அன்றி அவற்றைப்பற்றிய போதுமான அறிவு பலருக்கு இல்லை அணு என்ற வார்த்தையைமட்டும்கொண்டு அணுவை ஓளவையார் கண்டுபிடித்தார் என்பதுமுதல் பல பீலாக்களை அள்ளிவிடுகின்றார்கள் அணு தன் முழுவடிவைப்பெறவே நூற்றாண்டுகாலமாகியது மில்லியன்கணக்கான பணம் நேரம் பல விஞ்ஞானிகளின் கூட்டுமுயற்சி ஏற்கனவே இந்த அணு விடயத்தில் இது தொடர்பான பதிவை இட்டிருந்தேன்...அணு என்ற விடயத்தை நாம்  விஞ்ஞானத்திடமிருந்துதான் புரிந்துகொண்டோம் தவிர ஓளவையாரிடமிருந்தல்ல...சப்போஸ் எமது சமயத்தில் இது இருப்பதாக கொண்டால் எவளவு செலவு மிச்சம்... விஞ்ஞானிகள் தமது வாழ்க்கையை வேறுகண்டுபிடிப்புக்களிற்கு செலவிட்டிருப்பார்கள்.சயன்ஸ் ஒரு விடயத்தை எழுத்து ஆதாரத்துடன் கூறினால் மட்டும் ஏற்றுக்கொள்ளாது பரிசோதனைகள் தேவை வெறும் வார்த்தைகள் வார்த்தை ஜாலங்கள் ரசிப்பதற்குவேண்டுமானால் நன்றாக இருக்கும்) இப்படி குர்ரான் விளக்கங்கள் பல இணையத்தில் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன... 




கார்பன் கூட்டாளி என்ற பதிவர் இதைப்பற்றி அதிகம் எழுதுபவர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ஜெகோவாவின் சாட்சியங்கள் என்ற பெயரில் மதம் பரப்ப வருவார்கள் வாசலில் வைத்து அடித்து துரத்துவதில்லை அவர்களது கதையைக்கேட்டால் ஒரு புத்தகம் தருவார்கள் அதில் அறிவியல் விடயங்கள் நிறையவே இருக்கும்...இடையிடையில் பைபிளன் வசனங்க்ளைப்போட்டு பைபிளில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன என்று கூறுவார்கள்...அந்தப்பகுதியை மட்டும் சகித்துக்கொண்டால் தெரியாத அறிவியல் விடயங்களை தெரிந்துகொள்ளலாம் இதேபோல்தான்  நான் கார்பன் கூட்டாளி பதிவுகளை நான் வாசிக்கின்றேன் எனக்கு தெரியாத சில பல விடயங்கள் பதிவில் இருக்கும் அவற்றை மட்டும் எடுத்துக்கொள்வதுடன் சரி...மதப்பிரசாரத்திற்கான ஏற்படுத்தப்பட்ட நூதன வழிதான் இது...சும்மா பாண் துண்டைக்கொடுப்பதை விட ஜாம் பூசிவிட்டு பாண்துண்டைக்கொடுப்பது போன்றதுதான் இது....

அவரது பதிவில் நான் இட்ட கொமண்ட் ஒன்று..இது எந்த மத பிரசார பீரங்கி ஐ மீன் சயண்டிபிக் விளக்கம் கொடுக்கும் விஞ்ஞானிகளுக்கும் பொருந்தக்கூடிய கொமண்ட்டாகத்தான் நான் கருதுகின்ரேன்

//சமயங்களில் உள்ள புனித நூல்களில்,புராணங்களில் கடவுளின் புகழ் பரப்புவதற்கு பல அதிசயங்கள் கூறப்பட்டிருக்கும் இந்து சமயத்தில் பல இருக்கின்றது செங்கட்டியை பொன் கட்டியாக்கினார் அது இதுவென்று..இவற்றைக்கூறி மக்களை ஆச்சரியத்திற்குட்படுத்தி மக்களால் முடியாதவற்றை சமயம் செய்கின்றது என காட்டி சமயத்தை பரப்பும் முயற்சிகள் அவை ஆனால் தற்போது இவற்றை சொன்னால் கேள்விகேட்பார்கள் சோ அவை தோற்றுப்போயின எனவே இருக்கவே இருக்கு ஒரு வழி பைபிளில் விஞ்ஞானம் பிரபஞ்ச ரகசியம்,குர்ரானில் ரகசியம் என்று இப்போது புதிதாக் கிளம்புகிறார்கள்.உங்களது போஸ்டில் விஞ்ஞான விளக்கங்கள் உள்ளன ஆனால் குர்ரான் தொடர்பான கருத்துக்களை அவற்றோடு இணைத்ஹ்டுவிடுகின்றீர்கள்...என்னைப்பொறுத்தவரை விஞ்ஞான வளர்ச்சியின் முன் சமயங்கள் ஈடுகொடுக்கமுடியாது என்ற உங்களது பயம்தான் குர்ரானுக்கு விஞ்ஞான விளக்கம் தேடவைத்துள்ளது..ஏனெனில் நீங்கள் குர்ரானை மாற்றமுடியாது இதே நிலைதான் பைபிளிற்கும்..
கொடுமை என்னவெனில் இவை எல்லாம் குர்ரான் ,பைபிள் போன்றவற்றில் கூறப்பட்டுள்ளது என கூறுகின்றீர்கள் உலகத்தில் எங்கேயாவது குர்ரான் விஞ்ஞானம் என ஒரு பாடத்தை கற்பிப்பார்களா? ஒருவேளை அரேபிய நாட்டில் செய்வார்கள் அவர்கள் இன்னும் அதைத்தான் செய்யவில்லை..

நாஸாவோ,அல்லது ரஷ்யாவோ அல்லது சீனாவோ வேறு நாடிகளில் உள்ள எந்த சயின்ஸ்டிஸ்ட் ஆவது குர்ரானையோ பைபிளையோ ஆராய்ச்சிக்குட்படுத்துங்கள் என கூறி அவற்றை ஆராய்கின்றானா?சயின்டிஸ்ட் சமய நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கலாம் அது அவர்களது தனிப்பட்ட விடயம் ஆனால் சயன்ஸுக்கு பரிசோதனை ஆதாரங்கள்தான் தேவை குர்ரானை வைத்து என்ன பரிசோதனை செய்யமுடியும் என்கிறீர்கள்?எந்த சமய நூலையும் வைத்து எந்த பரிசோதனையும் செய்யமுடியாது புளொக்கரில் நாம் இவற்றை பற்றிவிவாதிக்க முடியும் நிஜ உலகில் குர்ரான் சமய புத்தகம் என்பதைத்தவிர சயன்ஸுகு அது உதவப்போவதில்லை...பரிணாமம் பிழையாகவே இருக்கட்டும் இன்னொரு விதி கண்டுபிடிக்கப்படும்..கடவுள்தான் உருவாக்கினார் என்றால் எமக்கு ஆதாரம் வேண்டும் எழுத்துக்களைக்கொண்ட புத்தகம் ஒரு ஆதாரமாக கொள்ளமுடியாது..பரிணாமத்தில் சடுதியாக உயிர் தோன்றியதாக எச்சங்கள் ஆதாரங்களை தெரிவிக்கின்றன என ஒரு சமய்வாதி கூறினார் விண் கற்களில் இருந்து உயிர்வந்தது என்றும் ஒரு கொள்கை இருக்கு இது பரிணாமத்தை பிழையாக்கினால் அந்த் கொள்கை வெற்றிபெற்றுவிடும்..அது பிழைத்தால் இன்னொன்று எமக்கு தேவையெல்லாம் 5 புல அறிவால் உணரக்கூடிய ஆதாரங்கள்.அவ்வளாவுதான்...

சமயம் அழிந்துவிடும் அல்லது மறுக்கப்பட்டுவிடும் என்ற உங்கள் ஆழ்மனப்பயம்தான் இவ்வாறான விஞ்ஞானக்கோட்பாடுகளுடன் இணைந்த போஸ்ட்களினூடாக வெளிப்படுகின்றது என் நான் நினைக்கின்றேன்..இவற்றை நீங்கள் கூறுவதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கலாம் ஆனால் இவற்றைத்தவிர இவற்றால் வேருபயன் நான் அறியேன்...நான் உங்களது போஸ்ட்களை படிக்க இருக்கின்றேன் ரீஸன் எனக்கு சில விஞ்ஞான விளக்கங்கள் தேவை அவ்வளவுதான்...சமயம் மனித உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயம்..ஒருவனுக்கு அது ஊக்கியாக தொழிற்படும் என்றால் சமயம் நிலைத்திருக்கட்டும் அறிவியல் என்பது ஒருவனது(சாதாரண/பாமரமனிதன்) அக ஊக்கியாக தொழிற்படாது நீங்கள் அறிவியலின் துணை கொண்டு சமயத்தை பரப்புவதைத்தவிர்த்து...குர்ரானில் உள்ள நல்ல விடயங்களை தெளிவாக எடுத்துக்கூறுங்கள் நான் ஒரு இந்து ஆனால் குர்ரானில் என்ன இருக்கின்றது என அறிய ஆசைதான் ஆனால் சொல்லாடல்களில் உள்ள கஸ்ரம் படிப்பதை தள்ள்ப்போடுகின்றது இலகு தமிழ்/அழகு தமிழில் அவற்றை வெளியிடுங்கள் இப்படியானவற்றை செய்யுங்கள் தவிர சமயத்துடன் இணைத்து விஞ்ஞானக்கருத்துக்களை போடுவது உங்களை சார்ந்த சமயத்தவர்கள்,உங்களுக்கு மட்டுமெ மகிழ்ச்சியை ஏற்படுத்தும்//

பரிணாமம் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது  பதிவுலகத்திற்கு வந்த பின்னர்தான் தெரிந்தது குரு படத்தில் அபிஸேக் சொல்லுவார் தாசில்தார் என்கிற வார்த்தை கெட்டவார்த்தையாகனும் என்று அண்ணளவாக அதே வேலைதான் பரிணாமம் என்ற வார்த்தை இணையத்தில் கெட்டவார்த்தையாக மாறிக்கொண்டிருக்கின்றது..

பரிணாமத்திற்கு ஆதாரம் கேட்பவர்கள் பலரிடம் கடவுள் தொடர்பான படைப்பிற்கு ஆதாரம் கேட்டால் அவர்களிடம் எதுவுமில்லை பிறிண்ட் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தைத்தவிர...ஆனால் விஞ்ஞான விளக்கம்கூறும்போதுமட்டும் அகழ்வாரச்சி சான்றுகள் எச்சங்கள் கார்பன் டேட்டிங்க் முதல்கொண்டு அனைத்தும் தேவையாம் சுருக்கமான மதவாதிகளின் நிலையை கீழே உள்ள கார்ட்டூன் மூலம் விளங்கிக்கொள்ளமுடியும்.
இதுதாய்யா இங்க பலரது நிலமை
குர்ரான் விளக்கங்கள் தொடர்பில் ஏற்கனவே செங்கொடி பதிவுகளை அள்ளியிறைத்திருந்தார் எல்லாம் உங்களுக்குத்தெரிந்ததுதான் நான்தான் பீல்டுக்கு புதுசு

விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்


சரி விடுங்கள் பிரச்சனைக்கு வருகின்றேன் "பைபிள் இறைவேதமா" என்ற பேஜில் 16 ஆம் பெனடிக்ட் இஸ்லாமியராக மாறியிருப்பதுதான் பதவி விலகக்காரணம் என்ற கூற்று மிக நகைப்பிற்குரியது...அதைவிட அதற்காக அவர்கள் ஒரு போட்டோவை இணைத்திருந்தார்கள் 16 ஆம் போப்பாண்டவர்  குர்ரானை கிஸ்செய்வதைப்போன்ற போட்டோ அது அதில் இருப்பவர் உண்மையில் 16 ஆம் போப் அல்ல...2005இல் மரணமடைந்த Pope John Paul II என்பவரது போட்டோதான் அது அவர் குர்ரானை கிஸ்செய்தார் என்பது உண்மைதான்.அதோடு 16 ஆம் பெனடிக்ட் குளோனிங்க் போன்றவற்றிற்கும் தனது எதிர்ப்பை பதிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

May 14, 1999 - John Paul II kisses the Koran (Qu'ran) at the Vatican.

To the objectors who claim that this book was not the Koran, we present an excerpt from an interview with FIDES News Service (June 1, 1999). In it, Chaldean Catholic Patriarch Raphael I affirmed that he was present when John Paul II kissed the Muslim "holy" book:

 "On May 14th I was received by the Pope, together with a delegation composed of the Shi'ite imam of Khadum mosque and the Sunni president of the council of administration of the Iraqi Islamic Bank. There was also a representative of the Iraqi ministry of religion. ....

"At the end of the audience the Pope bowed to the Muslim holy book, the Qu'ran, presented to him by the delegation, and he kissed it as a sign of respect. The photo of that gesture has been shown repeatedly on Iraqi television and it demonstrates that the Pope is not only aware of the suffering of the Iraqi people, he has also great respect for Islam."

இது நடைபெற்ற காலத்தில் இது தொடர்பான பல எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தன என்பதும் உண்மைதான்...

மத நல்லிணக்கம் என்பதை மதவாதிகள் மதித்தால் கூட இப்படித்தான் பிரச்சனையில் போய்முடிகின்றது.பொழுது போகவில்லையெனில் அந்தப்பேஜை லைக்செய்யுங்கள் நன்றாக பொழுது போகும்


இணையத்தில் நியூயோர்க் ரைம்ஸ்,சி.என்.என்,டெய்லி மெயில்,பி.பி.சி என்று எதில் தேடியும் போப் இஸ்லாமுக்கு மாறியதுதான் பதவியை ராஜினாமா செய்யக்காரணம் என்பதுதொடர்பான எந்த செய்தியையும் என்னால் அறியமுடியவில்லை ஆனால் முஸ்லீம் சைட்கள் மட்டும் இப்படியான செய்திகளைவெளியிட்டிருப்பதுடன்...போப் உண்மையான இறைவன் அல்லாதான் என பேட்டிகொடுத்திருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன...


Dead Seriousness News: Pope Benedict XVI Resigns Papacy, Converts To Islam



HOLY SEE – In a shocking press conference Sunday, Pope Benedict XVI revealed to the world that he will be stepping down from the Catholic Church’s highest office. “Through prayer and reflection over the past years,” the world’s holiest man began, “I’ve realized that Allah is the one true God.”
Amid clattering camera shutters and roaring reporters, Pope Benedict patiently answered questions, citing traditional Muslim folklore as well as passages from the Qur’an to explain his decision. His session was interrupted only once, when he swiveled South-East to face Mecca, stooped to the ground, and recited the Asr, one of the five daily prayers central to Muslim belief.
The startling reversal comes as a shock to many familiar with the Pope’s policies on Islam. “Show me just what Muhammad brought that was new and there you will find things only evil and inhuman, such as his command to spread by the sword the faith he preached,” the Bishop of the Vatican famously said of Islam in his 2006 lecture Faith, Reason and the University—Memories and Reflections.
When asked about the quote, Pope Benedict sighed with good-humored remorse and chuckled quietly to himself: “Yeah I’ve regretted that for some time. But I was young and naïve… I see things much clearer now. Besides, I’ve always kinda liked the thought of having a sword. The Cardinals were a real pain on that one.”
When asked whether he would be reverting to his born name, Pope Benedict enthusiastically interjected. “I’ve decided to change my name to Sajjad Sayyid Ratzinger,” His Ex-Holiness explained. “I’m keeping my surname purely for logistical reasons, so my Facebook friends and Twitter followers won’t be confused.”
His transition hasn’t been without opposition. Hours after the press conference, a special Fox and Friendssegment aired on FOXNEWS, featuring a picture of the Pope photoshopped to include stereotypical Islāmic features, including: a turban in place of his mitre, darkened complexion, black hair, and Arabic letters spelling out an endorsement of Barack Hussein Obama tattooed across his chest. Beneath the picture, the panel discussed the possible involvement of Pope Benedict XVI, 85, in 9/11. The segment’s title, “The Holy Heathen,” emblazoned the lower left corner of the screen.
This morning, newspapers nationwide featured an editorial by Bill O’Reilly detailing the parallels between the Pope’s “betrayal of God-loving Christians everywhere” with the “betrayal of the American people and the Constitution by Benedict Arnold, his liberal agenda, and his radical left-wing entourage.”
போதாததற்கு தமிழ் இணையத்தளங்களும் தங்களால் ஆன பணிகளை செய்திருக்கின்றன..
பாப்பரசருக்கு பணிவிடை செய்தவர் ஊடகங்களுக்கு வழங்கிய அதிர்ச்சி தகவல்..
16வது பாப்பரசர், ஆசிர்வதிப்பர் எனும் போப்-பெனடிக் இஸ்லாத்தைத் தழுவினாரா? அல்லது இது ஓர் பொய்யான செய்தியா என்பதில் இன்று உலகம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பதவியைத் துறந்த போப் பெனடிக் அவர்களின் பின்னால் பல மர்மங்கள் மறைந்திருக்கின்றன.
பாப்பரசரருக்கு பணிவிடை செய்பவர்களுள் ஒருவர் ஆச்சர்யம் மிக்க தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கி இருக்கின்றார்.
அவற்றுள், கடந்த ஞாயிறு தினத்தன்று போப் அவர்கள் முஸ்லிம்கள் வணங்குவதற்கு தகுதியான திசையாக எடுக்கும் மக்கா திசையை நோக்கி எழுந்து நின்று வணக்கமொன்றை மேற்கொண்டதாகவும், அது ‘அஸ்ர்’ எனப்படும் முஸ்லிம்களின் ஐவேளைத் தொழுகைகளில் ஒன்றாக இருந்தது’ எனவும் கூறியிருந்தார்.
மேலும் 2006ல் இருந்து இஸ்லாமிய மறையான அல்குர்ஆனைப் படிப்பதில் போப் பெனடிக் அவர்கள் ஆர்வம் காட்டி வந்ததாகவும் கூறியிருந்தார்.
இச்செய்தியைக் கேட்டதும் மீடியாக்கள் அதிர்ச்சியடைந்தன. தங்களது ஒளி-ஒலிபரப்பு சாதனங்களை கீழேவைத்துவிட்டு, வத்திக்கான் வணக்கஸ்தலத்தின் ஊடகப் பிரிவில் போப் அவர்களைக் காண இருந்தவர்கள் வாயடைத்துப் போயினர். நம்ப முடியாமல் தங்களது அலுவலகங்களை நோக்கித் திரும்பினர்.
இதைவிட, ஆம்! போப் அவர்கள் சென் பீட்டர்ஸ் பஸிலிகா தேவாலயத்தின் பல்கனியில் 5 வேளையும் மக்காவை நோக்கி தொழுது வந்திருக்கின்றார் எனவும், அல் குர்ஆனை அவர் படித்து வந்தார் என்பதும் தற்பொழுது வத்திக்கான் சென் பீட்டர்ஸ் தேவாலயத்தின் போப் அவர்களின் அதி நம்பிக்கைக்குரியவர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் மேற்கத்தேய ஆங்கில ஊடகங்கள் இச் செய்தியை மிக இரகசியமாக பேணி கையாண்டு வருவதாகவும், இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
சில கிறிஸ்துவ ஆங்கில ஊடகங்கள் ‘பாப்பரசர் இஸ்லாத்தை தழுவியது எனும் செய்து வெறும் கட்டுக் கதையே’ என்பதாக ஊர்ஜிதப்படுத்தி வருகின்றன
எப்படி இருந்த பொதிலும் ‘ முஸ்லிம்களுக்கு ஏற்படும் துன்பங்களின் போது முஹம்மது நபி அவர்களை மேற்கோள் காட்டி அமைதிப்படுத்தி வந்ததும், கடவுள் ஒருவர் இருந்தால் நிச்சயமாக அவர் ஒருவரே என்றும் அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது’ எனவும் ஊடகத்திற்கு பகிரங்கமாக சென்ற ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்ததும் உலகறிந்த விடயமே!


போப்பான்டவர் ராஜினாமாவுக்குக் காரணம் என்ன..?
[ குளோபல் இஸ்லாம் - GI ]

வாடிகனின் போப் 16ஆம் பெனடிக்ட் அண்மையில் தனது பதவியிலிருந்து விலகினார். முதுமையும் நோயும்தான் காரணம் என்று அறிவித்தார். கடந்த 600 ஆண்டுகளில் பதவியிலிருந்து தாமாக விலகிய முதலாவது போப் இவர்தான். இது கத்தோலிக்க வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.

உண்மையில் வயோதிகம்தான் காரணமா...? 

இவரைவிடக் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டாவது யோவான் பவுல் பதவியிலிருந்து விலகவில்லையே! சஊதி ஆய்வாளர் ஒருவர் இது குறித்து ஆய்வு செய்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருக்கிறார். இவர் மதங்கள் ஒப்பீட்டியல் மற்றும் வாடிகன் விவகாரங்களின் சிறப்பு ஆய்வாளர் என்பது குறிப்பிடத் தக்கது.

இஸாம் முதீர் எனும் அந்த ஆய்வாளர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்களாவன:

புராதன பைபிள் ஒன்று கிடைத்திருக்கும் இரகசியம் வெளியுலகிற்குக் கசிந்ததே உண்மையான காரணம். அதில் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகை பற்றிய முன்னறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த மூவர் இஸ்லாத்தை ஏற்றது மட்டுமன்றி, அதை வெளிப்படுத்தாமல் வாடிகனிலேயே தற்போது இருந்துவருகின்றனர். போப் அம்மூவரைப் பற்றி அறிய விரும்புகிறார். அவர்களில் ஒருவர்தான் தகவல் கசியக் காரணமாக இருக்க முடியும் என்று கருதுகிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய மற்றொருவர் தென்னாப்பிரிகா சென்றுவிட்டார். அங்கு அஹ்மத் தீதாத் அவர்களின் ஊரில் வைத்து, தான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவித்தார். இவர் இஸ்லாத்தை ஏற்றதற்கு தீதாத் அவர்களே காரணமாம்!

வாடிகன் பொறுப்பாளர்களுடன் இந்த விஷயம் தொடர்பாக நேருக்குநேர் விவாதிக்கத் தாம் தயார் என்றும் இஸாம் சவால் விடுத்துள்ளார். அவ்வாறே, வாடிகனின் பெரிய மனிதர்களில் 35 ஆயர்களும் பாதிரிகளும் இஸ்லாத்தை ஏற்றபின்பும் உயிருக்குப் பயந்து அதை மறைத்துவைத்தனர் என்பதையும் பிறகு வாடிகன் பொறுப்பிலிருந்து விலகினர் அல்லது விலக்கப்பட்டனர் என்பதையும் வாடிகனால் மறுக்க முடியுமா? என்றும் இஸாம் சவால் விடுத்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக போப்பும் ஆயர்களும் இந்த விஷயத்தில் மௌனம் சாதித்துவந்தனர். இச்செய்தியை மறுக்க வாடிகனால் இன்றுவரை இயலவில்லை. இறுதியாக போப் பெனடிக்ட் ராஜினாமா செய்தார். 2006ஆம் ஆண்டில் போப் வெளியிட்ட அறிக்கைகளில் இஸ்லாத்தையும் இறைத்தூதரையும் கொச்சைப்படுத்திப் பேசிப்பார்த்தார். இதன்மூலம் விஷயத்தை மறைத்துவிடலாம் என்பது அவரது எண்ணம். ஆனால், சூனியம் சூனியக்காரனுக்கெதிராகவே திரும்பிவிட்டது; பதவி விலகிவிட்டார்.

வாடிகனின் உளவுத் துறையினர், அந்த பைபிள் பிரதி யார் கையில் உள்ளது என்பதை வலைபோட்டுத் தேடிவருகின்றனர். உண்மை என்னவென்றால், அதைப் பாதுகாக்கத் தவறியவர் போப்தான்; அதைத் தொலைத்த குற்றத்திற்காகவே இப்போது பதவியைத் தொலைத்திருக்கிறார். பிரிட்டன் போன்ற பல நாடுகள், போப் தங்கள் நாட்டுக்கு வந்தால் உடனே கைது செய்யத் தயாராயிருந்தன; கைதுக்கான குறிப்புகள் வெளிவந்தது உண்மை என உறுதிப்படுத்தினார் இஸாம். போப்புடைய ஆயர்கள் பலர் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதை போப் பிரயாசப்பட்டு மறைத்தார் என்பதே அந்நாடுகளின் குற்றச்சாட்டுகளாகும்.

இஸ்லாமியப் பிரசாரத்திற்கு முன்னால் இவர்களின் தோல்விகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாவதும் வரவிருக்கும் போப்பிற்குப் பெரிய சவால்களாக இருக்கும். 

(அல்முஜ்தமா)//

இதே போன்று போப் முஸ்லீமாக மதம்மாறினார் என்றசெய்தியை 2006இலும் பரவவிட்டிருக்கின்றார்கள்.

Tuesday, 19 September 2006
R.I.P photoshop

VATICAN CITY -- Pope Benedict's speech last week, which the Muslim world took to condemn Islam for violence, set off a whole series of riots, church burnings and the murder of a nun. The Pope, following multiple failed apologies for his words,announced today, that "to bring peace to himself," he has converted to Islam.
The Pope, wearing the simple garb of a pilgrim on his way to Mecca, read his statement from his balcony that faces St. Peter's Square. The statement was profound in its simplicity and obvious sincerity.
"As of today, I am follower of the Allah's Greatest Prophet and the Final Messenger, Muhammad, blessed be his holy name," said Pope Benedict, formerly Joseph Ratzinger, who has asked to be now called Himar Abdur-Rasool al-Ahad.
"I have come to this decision through much prayer and meditation," the former Pope continued. "It is clear that I offended many of the Muslim faith by my ill-chosen words, but even more so by my long-held beliefs. Finally, after observing the passion of the Muslim believers, I realized Islam is the true way to peace."
As church theologians and religious scholars continue to debate the matter, it is not clear if all observant Catholics are now Muslims or still infidels. "The Pope's ex cathedra statements on doctrinal matters are infallible. Thus, it would seem all committed Catholic believers would be required to become Muslim as well," said Father Geary O'Caughlin, a distinguished teacher of moral theology at the Papal University in Rome.
Other religious authorities are not convinced. "However, it is not clear whether the Pope at the moment of conversion to Islam was still a Catholic and thus still Pope, or already a Muslim and thus just another Muslim imam, whose pronouncements may only be authoritative in matters of spiritual guidance, daily living and suicide bombing," said Dr James C. MacIntyre, a Catholic theologian and professor of theological ethics at Marquette University.
Despite the confusion the Pope's conversion has caused, it has created at least a bit of clarity. What we do know now, the scholars agree, is the answer to the question "Is the Pope Catholic?" The answer is now clearly no
http://www.thespoof.com/news/world/11387/pope-benedict-converts-to-islam

கூகிளை எவளவு கிண்டியும் நம்பும்படியான செய்தியை அவதானிக்கமுடியவில்லை குட்டையைக்குழப்பும் முயற்சியாகத்தான் இது தோன்றுகின்றது ஆதாரம் இருந்தால் கொமண்ட் செய்யவும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்