x men கதாப்பாத்திரங்கள் உண்மையில் இருக்கின்றார்களா?

xmenபெரும்பாலானவர்கள்இத்திரைப்படத்தைப்பார்த்திருப்பீர்கள்.இப்படத்தில்  இயற்கையில் இருக்கும் சக்திகளைக்கட்டுப்படுத்தும் அபூர்வமான மனிதர்களை  மனிதப் பரிணாமத்தின் அடுத்த   நிலைகளாக காட்டியிருப்பார்கள்.இவர்களை அத்திரைப்படம்  மியூட்டன்கள் என அழைத்தது.படத்தில் மின்னலைக்கட்டுப்படுத்தும் காதாப்பாத்திரம்.உலோகங்களைக்கட்டுப்படுத்தும் கதாப்பாத்திரம் இவர்தான் படத்தின் வில்லன் "மக்னிட்டோ".வேறு ஒருவரின் மனதில் இருப்பவற்றை அறிவதுடன் மனிதர்களது மனதை ஊடுருவி செல்லும் சக்திவாய்ந்த கதாப்பாத்திரமான சேவியர்.ஹீரோ லோகன்.இன்னும் பல சக்திகளைக்கொண்ட பல சூப்பர் ஹியூமன்ஸ்களை எக்ஸ்மான் திரைப்படத்தில் நாம் பார்த்திருக்கின்றோம்.
இப்படத்தில் காட்டப்பட்டதுபோன்ற சூப்பர் சக்திகளைக்கொண்ட சூப்பர் ஹியூமன்ஸ் உண்மையில் இருக்கின்றார்களா? இருக்கின்றார்கள்.ஆனால் படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல் முழுமையாக சக்திகளைக்கட்டுப்படுத்துபவர்களாக அல்லாமல் சாதாரண எம்மைப்போன்றவர்களால்  நினைத்துக்கூடப்பார்க்கமுடியாதவற்றை சர்வசாதாரணமாக செய்யும்  மனிதர்கள் அவர்கள்.இவ்வாறான சக்திகளைக்கொண்ட மனிதர்களை தேடி அவர்களால் சாதாரண மனிதர்களை விட அசாத்தியமாக எவற்றை செய்யமுடியும் என வெளியுலகிற்கு கொண்டுவரும் வேலையை செய்கிறார் Stan Lee’.ஸ்ரான்லி பிரபல  கொமிக்ஸ்ஸான மார்வெல் கொமிக்ஸின் முன்னாள்  chairman.எக்ஸ்மான்.ஸ்பைடர்மான்,பென்ராஸ்ரிக் 4 போன்ற பிரபல கதாப்பாத்திரங்களை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.
ஸ்ரான்லீஸ் சூப்பர் ஹியூமன்ஸ் என்னும் பெயரில் தொடராக இது இப்பொழுதும் ஓளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
Stan Lee

சாதாரணமனிதர்களில் இருந்து வேறுபட்ட அசாதாரணமான மனிதர்களைத்தேடும் பணியை Daniel Browning Smith என்ற ஒரு சூப்பர் ஹியூமனிடம்தான் ஒப்படைத்திருக்கிறார் ஸ்ரான்லீ. இவர் உலகின் the most flexible man in the world என்ற பெயர்வாங்கியவர். தன்னைப்போன்ற சூப்பர் ஹியூமன்ஸ்களை தேடும்பணியில் ஈடுபடுகின்றார் டானியல்  தேடும்படலத்தையும் கண்டுபிடிக்கப்படும் அசாதாரமனிதர்களையும் உள்ளடக்கியதுதான் இந்த சீரிஸ்.ஒரு மனிதன் தனக்கு அசாதாரண சக்தி இருக்கின்றது என்று அறிவித்துக்கொண்டாலெல்லான் உடனே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் மருத்துவர்கள்,சயின்ரிஸ்ட்போன்றவர்களிடம் அழைத்து சென்று அந்த மனிதனை பரிசோதித்த பின்னர்தான் அவர் சூப்பர் ஹியூமனா இல்லையா என அறிவிக்கப்படுவார்.இல்லைன்னா நித்தியானந்தா போன்றவர்களும் கிளம்பிவிடுவார்கள் குண்டலினி சக்தி இருக்கு காட்டுகிறேன்வா என்று.சீரிஸ்சில் கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர் ஹியூமன்ஸை ஒவ்வொருவராக பார்ப்போம்.முதல் சூப்பர் ஹியூமனை இந்தியாவில் இருந்து தொடங்குவோம்.

எலக்ரோ மனிதன்

இந்தியா கொல்லமைசேர்ந்தவர் ராஜ்மோகன்.இவர் கொண்டிருக்கும் அசாத்தியமான சக்தி தன் உடலினூடாக மின்னோட்டை சர்வசாதாரணமாக ஒரு உலோகம்போல் கடத்துகின்றார்.மின்னை தன் உடலுக்கூடாக கடத்தும்போது இவருக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படாது.சாதாரண ஒரு மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அளவைவிட 30 மடங்கு அதிகமின்னோட்டத்தை தனக்கூடாக சர்வசாதாரணமாக ராஜ்மோகனால் கடத்தமுடிகின்றது.உச்சக்கட்டமாக தனக்கூடாக பாயும் மின்னோட்டத்தின் உதவியுடன் முட்டையொன்றை பொரித்துக்காட்டினார்.மேலே படத்தில் அதுதான் காட்டப்பட்டுள்ளது.


மோகனைபரிசோதனை செய்ததில் அவரது அதிக தடைத்திறன்கொண்ட தோல் மின்னைக்கடத்துவதில் உதவியிருப்பதாக கண்டுபிடித்தார்கள்.சாதாரண மனித உடல் 180 கிலோ ஓம் தடையைக்கொண்டது.ஆனால் மோகனின் தோலின்தடை எவ்வளவு தெரியுமா?1.3 மில்லியன் ஓம்ஸ்.தனது  தாயார் இறந்ததும் தற்கொலைசெய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் தற்கொலைக்கு இவர் மின்சாரத்தை தெரிவுசெய்தார்(இப்போது யாரும் தற்கொலைக்கு  மின்சாரத்தை தெரிவுசெய்யமுடியாது) மின்சாரத்தில் கைவைத்தபின்னும் அவருக்கு எதுவுமே நடைபெறவில்லை அப்போதுதான் தனக்கு இப்படி ஒருவித்தியாசமான பவர் இருக்கின்றது என்பது ராஜ்மோகனுக்கு தெரியவந்திருக்கின்றது.






இவரைப்போல் வேறொரு சூப்பர்  ஹியூமன் இருக்கின்றார்.ராஜ்மோகன் தன் உடலினூடாக(தோலினூடாக)மின்னைக்கடத்தக்கூடியவர்.ஆனால் அடுத்துவருபவர்.தன்னை மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்துகொள்வார்.பின்னர் அந்த சார்ஜ்ஜின் உதவியுடன் பல்ப்களை எரியச்செய்வார்.
இதைசெய்யும் சூப்பர் ஹியூமனின் பெயர் Zhang Deke.சீனாவைச்சேர்ந்தவர்.71 வயதானவர்.


ஒவ்வொரு நாளும் 220 வோல்டேஜ் மின்சாரத்தின் மூலம் தன்னை சார்ஜ் ஏற்றிக்கொள்கின்றார் இவர்.உயிரோடு இருக்கும் மீனை 2 நிமிடத்தில் தன் உடலினூடு பாயும் மின்சாரத்தின்மூலம் அவித்துவிட்டார்.

அடுத்ததாக நாம் பார்க்க இருக்கும் சூப்பர் ஹியூமன் இவ்விருவரைவிடவும் அதிக சக்திகொண்டவர்.

பெயர் Slavisa Pajkic  சேர்பியாவைச்சேர்ந்தவர்.இவர் தனது உடலினூடாக 20 000 வோல்டேஜ் மின்சாரத்தை எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் ஊடுகடத்தக்கூடியவர்.


இவர் 17 வயதில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது மின்சாரம் பாயும் ஒரு உலோகத்தின் மீது தவறிவிழுந்துவிட்டார்.மழைவேறு நன்றாக பெய்துகொண்டிருந்தபடியால் இவரால் எழக்கூடமுடியவில்லை.ஆனால் இவருக்கு மின்சாரம் தாக்கவில்லை.சற்று தூரத்தே இருந்த நண்பர்கள் தமக்கு சாக் அடிப்பதாக கத்தியுள்ளார்கள்.அன்றுதான் தனது பவரைப்பற்றி இவர் தெரிந்துகொண்டார்.

இவர் 2 தடவைகள் கின்னஸ்சாதனை படைத்துள்ளார்.1983இல் தன் உடலினூடாக 20 000 வோல்டேஜ்ஜை கடத்தி தனது முதலாவது சாதனையைப்படைத்தார்.அடுத்த சாதனைதான் எக்ஸ்மான் ரேஞ்சிற்கு இவரை அசாத்தியமாக உயர்த்தியது.
2003 இல் அடுத்த சாதனை என்ன செய்தார் தெரியுமா? ஒரு கப் நீரை 97 டிகிரி வெப்ப நிலைக்கு 1நிமிடம் 37 விநாடிகளில் கொதிக்கவைத்துவிட்டார்.இது இரண்டாவது சாதனை.

இவரால் மின்சாரத்தை சேமித்துவைக்கவும்முடிகின்றது.ஏனையவீடுகளில் மின்சாரம் தடைப்படும்போது எனது சார்ஜ்ஜைவைத்துக்கொண்டு என்வீட்டிற்கு ஒளியூட்டமுடியும் என்று கூறுகின்றார் Slavisa Pajkic.

"When there is a sudden power failure, my folks do not have to worry. My house is always shining. I can be an insulator, conductor, accumulator and heater."

மக்கள்  தொலைக்காட்சியில் என்னைப்பார்த்துவிட்டு என்னைத்தேடிவருகின்றார்கள் ஆனால் கைகுலுக்குவதற்குமட்டும் பயப்படுகின்றார்கள்..

தன்னுடலிற்குள் 20 000 வோல்டேஜை பாயவிட்டு முள்கரண்டியால் சிக்கன்  sausage ஐ குற்றிவைத்திருக்கின்றார்.சிறிது நேரத்தில்(வெறும் 20 செக்கண்ட்ஸ்)  sausage  பற்றி எரிகின்றது.ஒரு கையில் டியூப் லைட்டை வைத்திருந்தார் அதற்கு வயர் எதுவும் கொடுக்கவில்லை அது தானாகவே எரிந்தது.

Bright spark: Slavisa Pajkic from Serbia sets light to a fuel-soaked cotton wool ball with an electric discharge from his scalp








இவர்களைப்போன்று அசாதாரணசக்திகளைக்கொண்ட எக்ஸ் மான்களை தொடரும் பதிவுகளில் பார்ப்போம்..

ஒருவிடயத்தை கூறமறந்துவிட்டேன்Slavisa Pajkic  ற்கு ஒரு இலட்சியம் இருக்கின்றதாம் தன் உடலினூடாக 1 மில்லியன் வோல்டேஜை செலுத்தி சாதனைபடைக்கவேண்டுமாம்.சந்தித்தால் கைகுலுக்கி விஸ்பண்ணுங்கள்.

தொடரும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்