சவபுராணம்


எல்லாம் வல்ல இறைவர் தலைவன் சிவனின் விரதத்தை நோற்கிறோம் நாம். கேதீச்சரத்துக்கும் கோனேஸ்வரத்துக்கும் முன்னால் புதைகுழிகளை வெளிக்காட்டி தவறிழைத்தவர்களை நின்று கொல்லும் ஐநாவுக்கூடாக தண்டிக்கத்தான் இறைவன் முன்னொருநாளில் அத்தனை அப்பாவிகளையும் துப்பாக்கி முனையில் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டு மானம் பிடுங்கப் பட்டு புதைக்கப்பட வைத்தான் என்பதால், அவனது திருவிளையாடலை நினைத்து நெக்குருகி, இந்தச் சிவபுராணப் பதிகத்தை ஓதி, சீட்டாடியோ, பக்திப் படங்கள் பார்த்தோ, பட்டிமன்றம் பார்த்தோ விரதிப்போம்.




மாணிக்க வாசகர் அருளாத சிவபுராணம்.

தொல்லைதரும் தெய்வத் துன்பம் தனைக்காட்ட
வல்லவனே உன்னை வம்பிழுத்தேன், தொல்லுலகின்
முன்னைத் தமிழ்மகனே உன்னை வதைக்கமாட்டேன்,
என்னை, வணங்கவேண்டாக் கால்.



நமச்சிவாய வாழ்க, நாசமறுப்பே வாழ்க
இமைப்பொழுதும் இழிசெயல்கள் நீக்காதான் தாள்வாழ்க
கோகளை ஆண்ட முதுதமிழர் வாழ்வெல்லாம்
நாசமும் ஆனபோதும் நகராதான் தாள்வாழ்க
ஏகன் அநேகனென இறைவன் அடிதொட்டோர்
வாழ்க்கை கெடுத்தாண்ட வெத்தன் அடி வாழ்க
பிறப்பறுக்கும் சிங்களவர் வெற்றிதந்தான் வாழ்க
புறத்தார்க்கே சிறப்பளிக்கும் புண்ணியவான் வெல்க
கரம்தூக்கிச் சரண்டரென சென்றவருக் கெல்லாம்
சிரம்சிதைத்தோர் வெல்லவைத்த சீரோன் விழல் வெல்க
நீசர் எனும் சாதி மந்தை மறி போல
வீதியிலே வீழவைத்த விந்தையடி போற்றி
தேசத்தே நின்ற துரோகிகளை எல்லாம்
மாயமாய் மறைத்துவைத்த மன்னன் அடி போற்றி
பாபர் மசூதியையும் அழித்தவனே போற்றி
போபால் விஷவாயு அருளுமலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் பெயராலே, அவன் ஆயுதத்தால்
சிந்தை மகிழச் சிறுவரென்றும் பாராது
முஸ்லிம் இனம் முழுதும் அழிய உழைப்பன்யான்.


கண்ணுளவன் எல்லாம் கதறும் வகை செய்த
எண்ணுதற் கெட்டா எத்தனையோ கற்பழிப்பை
விண்ணுறைந்து கண்திறந்து பார்த்தாய், விலக்கவல்லாய்
எண்ணில்லாத் தொல்லை தருவானே நின்பெரும் பாழ்
பொல்லா உலகில் வாழும்வழி நானறியேன்
ஹிட்லராய் ஒசாமாவாய் புஷ்ஷாய் ஒபாமாவாய்
ஜெங்கிஸ் கானாய் பாறை நெஞ்சர் பலராகி
மெல்லிய மனிதரைப் பண்பின்றிப் பிணங்களாய்
வல்லவர்கள் மாற்ற மனிதத்தன்மை சற்றுமின்றி
பார்த்தவாறே நின்ற கல்நெஞ்சே உன்னுலகில்
எல்லாப் பிறப்பும் ஆபத்தே, எம்பெருமான்,
மெய்யே உன் பொன்னடியை நக்கியவன் எல்லாம்
ஒன்றில் பட்டவனாய் அடிவாங்கிச் சாகின்றான்,
அன்றில் மற்றவனை மடையனாக்கி வாழ்கின்றான்
ஐயா உன்னுலகில் மனிதன் வாழ முடியாது.

பொய்யாய் மனிதரை மனுவர்ணம் நாலாய்
செய்யும் தொழில்காட்டி ஊரகல வைத்திட்டு
மெய்ஞானம் என்று பேய்க்காட்டும் அந்தணரே
இஞ்ஞாலம் ஆளவைத்த இனவெறிப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் பகுத்தறிவோர்
நோக்கம் மனித இழி வில்லாச் சமவுலகு.
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் சுனாமியினால்
போக்குவாய் நின்னைப் புகழாதோர் உயிரை என்றால்
உன் பக்தன் சேரியின் நாயை இணையானே,
மாற்றுக் கருத்துக்களை ஒன்றும் மதியானே
கறந்தபால் கிண்ணத்திலே விஷம் கலந்தாற் போல
சிறந்த முன்னோர் சிந்தனையுள் தேனூற்றைப் போல
பிறந்த சைவநெறி இந்துக் கழிவால்
நிறங்கள் ஓர் நான்காக மனிதர்களை மாற்ற
மறைந்திருந்தாய் எம்பெருமான் வாய்திறந்தாய் இல்லை
மதமென மூடிய மாய இருளை
அகம்பாவம் என்னும் ஆத்திகத்தால் பரப்பி
அறம் பால் வாழ்ந்துவந்த தமிழ் ஒழுக்கு மூடி
மலமொக்கும் ஆரிய வாழ்க்கைக் கழிவை
மனத்துள் புகட்டியவர் வஞ்சனைகள் செய்ய
விலங்கு மனத்து விசரா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு ஏதும்
நிலந்தன்னில் ஏதும் நன்மைதான் செய்தாயோ?
நாயிற் கடையாய்க் கிடந்த சாமியார்க்கு
தாயிற் சிறந்த இடம்தந்த தற்குறிகள்
மண்டைக்குள் சேற்றை நிறைத்த வல்லவனே
தேசங்கள் தோறும் சண்டை நடக்கையிலே
நாசமாய் பற்றியிந்தப் பூமிமக்கள் எரிகையிலே
தேச மக்கள் பணம் நெஞ்சில் வஞ்சமுளோர்
பொக்கற்றுள் போகவைத்த நல்லமனப் பேராறே
பாரா விழியானே பெண்கள் மானம் போகையிலே
ஓரமாய் நின்று இளிக்கும் வலியானே
நீராறாய் உதிரமெங்கள் ஊருள் வழிகையிலே
இன்னவென் என்னவும் செய்யாது நின்றானே
அன்பருக்கும் துன்பமே தருவானே வல்லையிலே
சோதியென உன்மகன் தேர் காடையர்கள் எரிக்கையிலே
பேதியிலே அங்கம் நடுநடுங்க ஒளித்தானே
ஈழ மண்ணை ஆட்கொண்ட இந்திய வெறிநாய்கள்
பார்த்த கண் முன்னாலே நடை பிணமாய் தம்முறவு
தீக்குவியல் குண்டால் தசைத்துணுக்காய் மண் விழவும்
தேக்கம் மரம்போல அசைவே இல்லா திருந்தானே
காக்கும் எம் காவலரே காடையராய் கொல்கையிலும்
ஆற்றைக் கடந்த மக்கள் அம்மணமாய் இறக்கையிலும்
தேற்றக் கூடப் புவியில் இறங்காத கல் மனத்தாய்
மற்றப் பாதி வையகத்தின் வெவ்வேறு இரு மதத்தார்
மற்றவனை மற்றவன் அழிப்பதுவே வேலையானார்
அப்பாவி மக்கள் இடையே பலியானார்
வேற்றுக் கிரக ஆராய்வில் வெளிக்கிட்டு
உன் தலையின் சந்திரன் வெறும் கிரகம் தான் என்றார்
போற்றிப் புகழ்ந்து உன்மேல் பொய்க்கதைகள் செய்தோர்
மந்தை மக்கள் காசில் மாளிகையில் வாழ்ந்தாரே
பன்றியும் பறவையும் குலமழிக்க வந்தனவே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
எத்தனையோ பிரச்சனையுள் ஏதேனும் செய்தாயா?
மந்தப் பிறவி, அறுப்பானே! நீ என்று
சொல்லிய இப் பிரச்சனைகள் பக்தர் பிரச்சனைகள்
என்று உந்தன் மண்டைக்குள் மெய் உணர்ந்து தீர்த்திடுவாய்
அன்று வணங்கிடுவேன் கல்லின் சிலையடி கீழ்
பல்லோரின் முன்னால் பணிந்து.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்