ரிசானா படுகொலை : தீராத சந்தேகங்கள்.
ரிசானா நபீக்கின் படுகொலையானது (எடுத்த எடுப்பிலேயே படுகொலை என குறிப்பிடுவதுபற்றி உங்களுக்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் தயவுசெய்து மேலே வாசிக்க வேண்டாம். இந்தப் பதிவு உங்களுக்காக எழுதப்படவில்லை.) உலகத்தின் மனிதர்களை மதிக்கும் அனைவரையும் வெகுவாகப் பாதித்துள்ளது. ஏழு வருடங்களாக நடந்த இந்த இழுபறிப் போராட்டத்தையும், அதன் பின்னணியையும் நாங்கள் அறிந்துகொள்ள, வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக போன ஒரு பெண் பட்ட துன்பத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள, அந்தப் பெண் கொல்லப்பட வேண்டியிருக்கிறது. வழக்கின் வரலாறு, பின்னணி என்பவை தொடர்பில் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். 2005 ஏப்ரல் முதல் திகதி , வேலைவாய்ப்பு முகவர்களின் ஊடாக ரிசானா நபீக் என்கிற சிறுமி , (2 .2.1988 இல் பிறந்த அவ ரை , முகவர்கள் கடவுச்சீட்டு மற்றும் வேலை விசா பிரச்சனைகளுக்காக 1982 ஆம் ஆண்டு பிறந்தவர் என பதிந்தார்கள்.) சவூதி தலைநகர் ரியாத்திலிருந்து நானூறு கிலோமீட்டர் தூரத்திலிருந்த அல் ஓடைபி வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அல் ஓடைபி வீட்டின் சமையல் , துப்பரவு வேளைகளில் உதவுவதும் , அல் ஓடைபி , நைப் ஜிசியம்