இடுகைகள்

தானம்-சிறுகதை

படம்
“உங்கட காணில ஏதாவது வேலையிருந்தா சொல்லுங்கோவன்?மனிசன் வேலையில்லாமல் ரண்டு நாளா வீட்டிலதான் இருக்கிறார்”.படிக்கட்டில் இருந்தபடி கதிரையில் இருந்த பாலரை கெஞ்சிக்கொண்டிருந்தது கனகு. "சரி கனகு இருந்தா சொல்லமாட்டனா? சரி சரி போய்ட்டு நாளைக்குவாவெணை" கனகு கந்தல்துணிகளை சுருட்டிக்கட்டிக்கொண்டு புறப்பட ஆயத்தமானது.கனகிற்கு நான்கு பிள்ளைகள் கடைசி மகன் ஸ்கொலர்சிப் படித்துக்கொண்டிருக்கின்றான்.மூத்தவளுக்கு கல்யாணமாகிவிட்டது.கனகின் கணவர் கூலிவேலை செய்பவர். நிவாரண அரிசியின் துணையுடனும் கனகு வேலைக்கு செல்லுமிடங்களில் கொடுக்கும் பரிசுகளுடனும்தான் கனகின் குடும்பம் வாழ்கின்றது. பாலர் எழும்பி சென்றதும் பாலரின் மூத்தமகன் கூப்பிட்டான் "அக்கா.....இண்டைக்கு வைரவருக்கு பொங்கினது புக்கை வடையெல்லாம் இருக்கு பொறுன்கோவன் கொண்டுவாறன்". "எடுத்துவையெணை நான் பின்னால வாறன்" என்று கூறிவிட்டு கனகு விறுவிறுவென்று பாலரின் வீட்டைச்சுற்றி குசினிக்கு வந்துசேர்ந்தாள். சாதிப்பிரச்சனை கனகிற்கு வீட்டுக்குள் செல்லவோ வீட்டினுள்ளே இருக்கும் தளபாடங்களை பயன்படுத்தவோ அனுமதியில்லை. வீட்டின் உள்ளே கு

வெறி

“ரோபி ஆஸ்பத்திரியிலையாம். ” எதிர்பார்த்ததுதான் என்றாலும், சஹா தொலைபேசியில்  சொன்னபோது சற்று அதிர்ச்சியாகத்தானிருந்தது. “எப்படி? ” ..என்பதை ஊகித்திருந்தாலும், கேட்டேன். “இடது கையில பிளேட்டால வெட்டி இருக்கிறாள். ரூமுக்குள்ள இருந்து முனகல் சத்தம் வர, மாமிதான் முதல்ல பார்த்திருகிறா.. இரவே கொண்டுவந்தாச்சு.. தேப்பன் தாயும் வந்திருக்கினம். நல்ல காலம் பெரிசா ஒண்டும் நடக்கேல்ல.. ” ‘கெட்ட காலம்.. ’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். நான் ரிசீவரை எடுத்து காதில் வைத்ததுமே துள்ளி மேசைமேல் ஏறி, தலையை நுழைத்து காதை ரிசீவரின் அந்தப் பக்கம் வைத்து ஒட்டுக்கேட்கும் பழக்கமுள்ள என்  சம்யு நான் ரிசீவரை வைத்ததுமே கேட்டாள்.. “ஆரப்பா கைய வெட்டினவா? நோகாதோ? ” குழந்தைகள் வாழ்க்கை எளிமையானது.. கேள்விகள் கேட்பது - எல்லாவற்றையும். பெரியவர்கள் வாழ்க்கை சிக்கலானது. பதில் சொல்வது - எல்லோருக்கும். *       *       * இரண்டு வருடங்களுக்கு முன்னர், உயர்தரப் பரீட்சைக்கு மூன்று மாதங்கள் இருக்கும்போது, பௌதிகவியல் மீட்டலுக்காக – பரீட்சை வினாத்தாள்கள் செய்துவிடச் சொல்லி என்னிடம் வந்தவர்கள் சஹானாவும், ரோபியு

சவபுராணம்

படம்
எல்லாம் வல்ல இறைவர் தலைவன் சிவனின் விரதத்தை நோற்கிறோம் நாம். கேதீச்சரத்துக்கும் கோனேஸ்வரத்துக்கும் முன்னால் புதைகுழிகளை வெளிக்காட்டி தவறிழைத்தவர்களை நின்று கொல்லும் ஐநாவுக்கூடாக தண்டிக்கத்தான் இறைவன் முன்னொருநாளில் அத்தனை அப்பாவிகளையும் துப்பாக்கி முனையில் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டு மானம் பிடுங்கப் பட்டு புதைக்கப்பட வைத்தான் என்பதால், அவனது திருவிளையாடலை நினைத்து நெக்குருகி, இந்தச் சிவபுராணப் பதிகத்தை ஓதி, சீட்டாடியோ, பக்திப் படங்கள் பார்த்தோ, பட்டிமன்றம் பார்த்தோ விரதிப்போம். மாணிக்க வாசகர் அருளாத சிவபுராணம். தொல்லைதரும் தெய்வத் துன்பம் தனைக்காட்ட வல்லவனே உன்னை வம்பிழுத்தேன், தொல்லுலகின் முன்னைத் தமிழ்மகனே உன்னை வதைக்கமாட்டேன், என்னை, வணங்கவேண்டாக் கால். நமச்சிவாய வாழ்க, நாசமறுப்பே வாழ்க இமைப்பொழுதும் இழிசெயல்கள் நீக்காதான் தாள்வாழ்க கோகளை ஆண்ட முதுதமிழர் வாழ்வெல்லாம் நாசமும் ஆனபோதும் நகராதான் தாள்வாழ்க ஏகன் அநேகனென இறைவன் அடிதொட்டோர் வாழ்க்கை கெடுத்தாண்ட வெத்தன் அடி வாழ்க பிறப்பறுக்கும் சிங்களவர் வெற்றிதந்தான் வாழ்க புறத்தார்க்கே சிறப

காதலர் தினம் - பதிவு போடாவிட்டால் மன்மதன் சாபம்.

படம்
எந்தப் பண்டிகை நடந்தாலும் அது தமிழர்களுக்குப் புறம்பானது, அதன் வரலாற்றுப் பின்னணி மோசமானது... கொண்டாடாதே, பலகாரம் தின்னாதே என்று போடுவதையே பிழைப்பாகக் கொண்ட நான், காதலர் தினத்துக்கும் அப்படிச் செய்தால் காதலிக்குப் பதில் சொல்லவேண்டி வரும் என்பதால், எதற்கு வம்பு என்று காதலர் தினத்தைக் கொண்டாடித் தொலைய முடிவெடுத்தேன். ஏனைய பல விழாக்களைப் போலவே, காதலர் தினமும் அதன் தொடக்கத்தில் வேறு காரணங்களுக்காகப் பின்பற்றப்பட்டு, பின்னர், காலமும் வணிகமும் கலாசாரங்களும் செல்வாக்கு செலுத்த, தத்தமது ஆரம்ப அர்த்தங்களை இழந்ததுதான். ஆனால், எவருக்குமே பாதகமில்லாததாலும், ஆரம்பக் கதைகள் திரிவுபடுத்தப்படாது அப்படியே இருப்பதாலும், காதலர்களுக்கான விழாவாக இதை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்.  என்னதான் விழாவாக, தனி நாளாக கொண்டாடப்பட்டாலும், காதலர் தினத்துக்கு தனி அர்த்தம் இல்லை. அன்றைக்கு காதலைச் சொல்ல முடிவெடுப்பது முட்டாள்தனம் என்பது எனது தாழ்மையான கருத்து. காதலைச் சொல்வது உணர்வுபூர்வமாக, காதலின் கடவுள் தேர்ந்தெடுக்கும் நாளாக இருக்கவேண்டுமே தவிர, அற்ப மனிதர்களால் அது முடிவெடுக்கப்பட முடியாதது என்பது எனது அ